இன்றைய நாள் இந்திர ராஜதந்திரத்தில் முக்கியமான நாள்

No automatic alt text available.

இன்றைய நாள் இந்திர ராஜதந்திரத்தில் முக்கியமான நாள்

சிக்கிம் எனும் பகுதி இந்தியாவோடு இன்றுதான் இணைக்கபட்டது, அது மிகசிறிய பகுதி ஆனால் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி

1975 வரை சிக்கிம் தனிநாடு, அதற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை, அதனை விழுங்கும் எண்ணமும் இந்தியாவிற்கு இல்லை, இந்தியாவின் சில பிடிகள் அங்கு இருந்தாலும், இந்தியா ஆதிக்கம் செலுத்தவில்லை ஆனால் சிக்கல் சீனா திபெத்தினை ஏப்பமிட்டபின் வந்தது

சிக்கிம் சிறிய மாநிலமாயினும் நாதுலா எனும் கணவாய் அங்குதான் உள்ளது, இந்திய திபெத்தின் நுழைவு வாயில் அது, அது சீனாவின் கரங்களில் சிக்க வாய்ப்பிருந்தது, சில காரணங்களுக்காக நேபாளமும் அதனை இணைக்க துடித்தது

இந்த நாதுலாவிற்காகத்தான் இந்தியா களமிறங்கியது, அக்கால இந்திய உளவுதுறை இந்திராவின் கண்காணிப்பில் மிக மிக திறமையாக செயல்பட்டது, வங்கபோருக்கு பின் இந்தியாவின் வலிமை மாற, அதுவரை அசால்ட்டாக இருந்த சீனா வேகமாக காய் நகர்த்தியது

ஆனால் இந்திய உளவுதுறையின் மிக தந்திரமான திட்டங்களில் சிக்கிம் மன்னருக்கு தப்பமுடியவில்லை, அப்படி மிக சரியாக தன் வலையில் சிக்க வைத்தது இந்தியா, அலறிதான் பார்த்தார் மன்னர் ஆனால் முடியவில்லை

அந்த ஆட்டம் மகா சுவாரஸ்யமானது, ஆனால் துரதிருஷ்டவசமாக சிக்கிம் மன்னர் நாம்கய்ல் என்பவரும் இந்திய உளவுதுறையும் ஆடிய ஆட்டங்கள் பெரிதாக வெளிவரவில்லை, ஆனால் மன்னரின் குடும்பத்தில் இந்திய உளவுதுறை புகுந்து ஆடியது மகா விறுவிறுப்பான காட்சிகள் என்பது செய்திகள்

இன்றுவரை அந்த சம்பவத்திற்கு தமிழில் புத்தகங்கள் இல்லை

அதன் பின் இந்திய மாநிலமாக சிக்கிம் இணைக்கபட்டது, நாதுலா எனும் அந்த கணவாய் இன்றும் இந்திய சீன எல்லை, வடகிழக்கில் மற்ற மாநிலங்களில் வன்முறை நடந்தாலும் சிக்கிம் இன்றுவரை அமைதியே

சுதந்திர இந்தியா சில வெளிநாட்டு விஷயங்களில் சாதித்தது என்றால் முதலில் வங்கப்போரும் , அதன்பின் சிக்கிம் இணைப்புமே. இலங்கையில் முழுவெற்றி பெற்றிருக்க வேண்டிய இந்தியா புலிகளின் அந்நிய சக்தி தொடர்பில் பின்வாங்கிற்று, பின் புலிகள் அந்நிய சக்திகளால் அழிந்தும் போயினர்

இந்தியா சொன்னபடி கேட்டிருந்தால் இவ்வளவு அழிவுகள் வந்திருக்காது, சாக கூடாத ராஜிவ் எல்லாம் செத்திருக்கமாட்டார்கள், இந்தியாவினை எதிர்த்து புலிகள் கிழித்ததென்ன? ஒன்றுமில்லை

போகட்டும்…

இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள், ராஜ தந்திரமாக இந்தியா வென்று நின்ற நாள், அந்த பெருமையில் இந்நாளை நினைவு கூறலாம்

செய்திகளில் அடிக்கடி நாதுலா பாஸ் எனப்படும் அந்த இடம் வரும்பொழுதெல்லாம் இந்திராவும் அவர் வைத்திருந்த பலம் வாய்ந்த உளவுதுறையும் நினைவுக்கு வரும்

இந்திராவின் மகத்தான சாதனை இது…