பிரபாகரன் வாழ்ந்தது ஒரு டான் வாழ்க்கையே
யாழ்பாணத்தில் பல்வேறு குற்ற சம்பவத்தி சம்பவத்துடன் தொடர்புடைய தமிழர்கள் மூன்று பேர் திருச்சியில் கைது செய்யபட்டு இலங்கை போலிசாரிடம் ஒப்படைக்கபட்டனர்.
படித்தவர் நிரம்பிய யாழ்பாணத்தில் 1960களில் சமூக விரோதிகள் பெருகினர், இந்தியாவும் இலங்கையும் தனிநாடான பின்பு கடத்தலும் பெருகிற்று, அப்படிபட்ட கடத்தல் கும்பலின் கைகளில் போராட்டம் சிக்கியதும் பெரும் தவறு.
பெரும் கொள்ளையர் எல்லாம் நாங்களும் போராளிகள் எங்களுக்கும் பணம் வேண்டும் என கொள்ளைகளில் சாதரணமாக இறங்கினார்கள், அந்த போராளிகளுக்குள் சண்டைவர பெரும் காரணமே இம்மாதிரி கொள்ளைகளே.
பத்மநபா தவிர எல்லா ஈழ போராளி இயக்கத்திற்கும் அப்படி ஒரு அடையாளம் இருந்தது, அங்கு அவர்களை கொள்ளையடித்த குற்றத்திற்காக போலீஸ் தேடினால் இங்கு தமிழகத்தில் அவர்கள் போராளிகளாக வலம் வந்தனர்.
பிரபாகரன் கூட அப்படியான கும்பல்களில் முதலில் இருந்தார், அவரின் இயல்பு அங்குதான் மாறியது, இறுதிவரை போராட்டத்தை ஒரு கடத்தல் கும்பலுக்கும் போலிசுக்கும் நடக்கும் போராட்டம் போலவே அவர் செய்துகொண்டிருந்தார்,
பிரபாகரன் வாழ்ந்தது ஒரு டான் வாழ்க்கையே
யுத்தம் முடிந்தபின்னும் இன்றும் யாழ்பாணம் பெரும் சமூக சிக்கலில் இருக்கின்றது, பெரும் வன்முறையும் வெட்டு குத்துக்களும் நாள்தோறும் அரங்கேறுகின்றன
அப்படி தேடபட்ட குற்றவாளிகள் சிலர் திருச்சியில் சிக்கியிருக்கின்றார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் விமானம் மூலம் வந்திருக்க முடியாது, அப்படியென்றால் கொழும்பிலே சிக்கியிருப்பார்கள்
பின் எப்படி வந்திருக்க வேண்டும்? வைகோ காட்டிய வழிதான்
ஆக இன்னும் விசா இன்றி, அங்கே கொள்ளையடித்துவிட்டு கடல்மார்க்கமாக இங்குவந்து அகதிகள் மத்தியில் ஒளியும் கும்பல் இருக்கத்தான் செய்கின்றது
இதனை போலிசார் சோதித்தால் அகதி முகாமில் போலிஸ் அராஜகம் என்பார்கள் இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள்.
1980களில் இப்படித்தான் இலங்கை வங்கிகளில் கொள்ளையிட்டு, சில கடைகளில் கொள்ளையும், சில கொலைகளையும் செய்த பிரபாகரனும் இந்தியாவில் இருந்தான், தமிழக போலிசாரிடமும் சிக்கினான்
அன்றே சிங்களம் அவனை ஒப்படைக்க சொன்னது, இந்திரா மறுத்தார். அவனை காப்பாற்றினார, அதன் பின் என்னவெல்லாமோ நடந்தது
இந்த மூன்றுபேரையும் போல அன்றே அவனை ஒப்படைத்திருந்தால் இத்தனை பெரிய அழிவு உண்டாயிருக்காது, இவர்களையாவது ஒப்படைத்தார்களே நல்லது
அங்கிள் சைமன், என்ன அநியாயம் இது? பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியில் யாழ்பாண குற்றவாளிகள் சிங்களனிடம் ஒப்படைக்கபடுவதா?
பார்வதி அம்மாவினை திருப்பி அனுப்பிய கலைஞரை (கலைஞர் என்ன இந்திய குடிநுழைவு அதிகாரியா??) சாடிய நீங்கள், இந்த 3 பேரை பிடித்துகொடுத்த தமிழக அரசை கண்டிக்காதது ஏன்???
உங்கள் தொண்டை எங்கே? , உங்கள் புஜம் எங்கே? நீங்கள் திரட்டிய மான தமிழ்படை எங்கே? எங்கே?
அட முதலில் நீங்கள் எங்கே???