மாட்டுகறி தடையினை நியாயபடுத்த சிலர் கிளம்பிவிட்டார்கள்

மாட்டுகறி தடையினை நியாயபடுத்த சிலர் கிளம்பிவிட்டார்கள், ஒரு வாதத்தை முன் வைக்கின்றார்களாம்

அதாவது முன்பு நரிகுறவன் நரி, கொக்கு எல்லாம் உண்டானாம், அவனை முன்னேற்ற பலரும் அரசும் அழைத்து படிக்க சொன்னார்களாம், வேறு தொழில்களில் ஈடுபடுத்தினார்களாம், அவன் இன்று திருந்திவிட்டானாம்

என் உணவு, என் நரி, என் பன்றி என அவன் சொல்லவில்லையாம், என் உணவினை தடுக்க நீ யார்? என அழிச்சாட்டியம் செய்யவில்லையாம். அப்படி செய்தால் இன்றும் அவன் நாரையினை தின்றுகொண்டிருப்பானாம்.

எப்படி எங்கள் வாதம் என சொல்லி சிரித்துகொள்கின்றார்கள்

இப்படி ஒரு குருட்டு வாதம் எங்காவது வைக்க முடியுமா?

நரி போன்ற அழிந்துகொண்டிருக்கும் உயிரினத்தின் காப்பாற்றவும், வாழ்வின் அடிபடியில் இருக்கும் அந்த சமூகத்தை உயர்த்த நினைப்பதும் தவறா?

அதற்கும் மாட்டுகறிக்கும் என்ன சம்பந்தம்?

இப்படி சம்பந்தமே இல்லாத இரு விஷயங்களை ஒப்பிட முடியுமா?

காகம் கருப்பு, கண்ணனும் கருப்பு ஆக காக்காவும் கண்ணனும் ஒன்று என சொல்ல முடியுமா?

இவர்கள் அப்படித்தான் பேசிகொண்டிருக்கின்றார்கள்

நரிகுறவன், நரிபண்ணையோ, அல்லது நாரை பண்ணையோ வைத்து வளர்த்து உண்டால் யார் தடுக்க முடியும்?

ஆனால் அருகிகொண்டிருக்கும் அந்த உயிரினங்களை அவன் தேடி சென்று அழிப்பது சரியா? அதனைத்தான் தடுத்தார்கள்

ஒருவன் மாட்டை வளர்க்கின்றான் உண்கின்றான் அதனை தடுப்படு எப்படி சரியாகும்?

இதோ மீணவ இனத்து மக்கள் படித்து முன்னேறுகின்றார்கள், அவர்கள் வீட்டில் இருக்கும் கருவாட்டினை தூக்கி எறி என சொல்வது சாத்தியமா?

ஆக அருகும் உயிரினம் என்றும், வளர்ப்பு மிருகங்கள் என்றும் வித்தியாசம் இல்லையா?

கொஞ்சமும் சிந்திக்காமல் பெரும் கருத்து மண்டையில் உதித்ததென மகிழ்வோடு ஓடிவந்து பதிந்துவிடுகின்றார்கள், இது சரியா என சிந்திப்பதுமில்லை

இவர்கள் சொல்லும் இந்த கருத்து இன்னொரு வகையில் கலவரத்தை தூண்டும்

மாட்டுகறி உண்பவர்களை எல்லாம் நாகரீகமற்ற நரிகுறவர்கள் என்றா சித்தரிக்கின்றீர்கள் என கிளம்பினால் நாடு தாங்காது

இவர்கள் திட்டமும் அதுவாகத்தான் இருக்கலாம்,

கொஞ்சமும் வாதமின்றி, வெட்கமின்றி, பொருத்தமின்றி கருத்துக்களை வைக்க இந்த கும்பலால்தான் முடியும் போல‌

இவர்களை சீரியசாக நினைத்தால் அவ்வளவுதான், அதனால் காமெடியாக எடுத்துவிட்டு நகர்ந்துவிட வேண்டும்