இலங்கையில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு ஒரு நினைவு சின்னம்

இந்திய அரசு உடனே செய்யவேண்டியது மெரீனாவில் அன்று இலங்கையில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு ஒரு நினைவு சின்னம் அமைக்க வேண்டியது

அந்த சின்னம் அன்றே அமைக்கபட்டிருக்க வேண்டும், கலைஞர் அந்த அமைதிபடையினையே வரவேற்கமாட்டேன் என அரசியல் செய்தவர், ஜெயா ராஜ்வின் ரத்தம் எனும் நன்றியினை மறந்தவர்

இந்த திருமுருகன் போன்றோரின் அழிச்சாட்டியத்தை நிறுத்தவேண்டுமென்றால், உடனே மெரினாவில் அந்த 1600 வீரர்கள் நினைவாக ஒரு நினைவு சின்னம் இலங்கையில் இருப்பது போல் அமைக்கபட வேண்டும்

அந்த வீரர்களுக்கு இலங்கையில் நினைவு சின்னம் இருக்கின்றது, ஏன் இந்தியாவில் இல்லை?

மெரினாவில் அந்த ராமசந்திரனுக்கும், ஜெயாவிற்கும் நினைவு சின்னம் இருக்கும்பொழுது இந்திய ராணுவத்திற்கு ஏன் இருக்க கூடாது

அந்த அமைதிபடைக்கான ஒரு அடையாளம் அமையாமல் பல விஷயங்களுக்கு பதிலடி தர முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுசின்னம் என ஒன்றினை வைத்திருக்கும்பொழுது, இப்படி அமைதிபடையினை விரட்டியதால்தான் அப்படி நடந்தது என சொல்ல அமைதிபடைக்கு ஒரு நினைவு சின்னம் மெரீனாவில் அமைக்கபட வேண்டும்

ராஜிவ் உயிர்விட்ட இடத்தில் மரியாதை செலுத்தபடும்பொழுதெல்லாம் மெரீனாவில் அந்த அமைதிபடை வீரர்களுக்காகவும் அஞ்சலி செலுத்தபட வேண்டும்

வந்தே மாதரம்….


 

வேகமாக வளரும் நாடு இந்தியா: ரஷ்யாவில் பிரதமர் மோடி பேச்சு

இந்திய உற்பத்தி குறைந்து அது வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கபட்டிருக்கின்றது, ஆனால் நமது பிரதமர் எப்படி புருடா விடுகின்றார் பார்த்தீர்களா?

அதுவும் ரஷ்யாவில்

உலகம் தலையில் அடித்துகொண்டு சிரிக்கின்றது..