எல்லா தலைவர்களும், எல்லா துறையினரும் கலைஞரை வாழ்த்துகின்றனர்

Image may contain: 1 person, sunglassesஎல்லா தலைவர்களும், எல்லா துறையினரும் கலைஞரை வாழ்த்துகின்றனர்

ஆனால் இந்த தமிழக துறையினரிடமிருந்து ஒரு சத்தமும் இல்லை, இதே கும்பல் முன்பு கலைஞர் ஆட்சியில் இருக்கும்பொழுது அவருக்கு எத்தனை விழா நடத்தியது?

அடிப்படையில் கலைஞர் சினிமாக்காரர், கலைஞரின் வெற்றி ஒவ்வொரு சினிமா கலைஞனும் தன் வெற்றியாக கொண்டாட வேண்டிய வெற்றி

கூத்தாடிகள் என்றும் கணிய கூட்டம் என்றழைக்கபட்ட அந்த துறையினை கலைத்துறை என மாற்றியதே கலைஞர்தான். தமிழகத்தில் அந்த துறைக்கு கலைஞரால்தான் பெரும் பெயர் கிடைத்தது

சந்தேகமே இன்றி சொல்லலாம், தமிழகத்தில் சினிமா துறையினை பெரும் பூதமாக உருவாக்கிய மந்திரவாதி அவர்தான்.

இன்று மற்ற மாநிலங்களை விட தமிழ் திரையுலகில் அரசியல் ஆசை பெரும் நெருப்புபற்றி எரிய அவர்தான் காரணம், தமிழ் நடிகர்கள் எல்லாம் அரசியல் பேசவும், அரசியலுக்கு வரவும் முதலில் அடித்தளமிட்டது அவர்தான், அவரே தான்

நாம் இந்தியாவில் ஆளமுடியாது என சொன்ன வெள்ளையனுக்கு, நாம் ஆளலாம் என செய்து காட்டிய ராபர்ட் கிளைவினை போல, திரைதுறையினரும் மாநிலத்தை ஆளலாம் என முதன் முதலில் செய்து காட்டியவரும் அவர்தான்.

எல்லா துறைகளையும் விட இந்த கலைதுறைக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம்..

ஆனால் அந்த நன்றிகெட்ட கூட்டத்திலிருந்து ஒரு வாழ்த்துமில்லை, எல்லாம் பயம் , ஆளும் கட்சியினை எதிர்த்துவிட கூடாது எனும் அச்சம்.

நாய்களுக்கு மட்டும்தான் நன்றி இருக்க வேண்டும் என்பது இறைவனின் விதி

நன்றிகெட்ட அந்த கூட்டம் போகட்டும், ஆனால் உள்மனதில் வலி இருக்கும், அந்த மனிதன் இன்று ஆட்சியில் இருந்தால் இந்த சினிமா ஜிஎஸ்டிக்கு முறையிடலாமே, ஏதாவது செய்வாரே என அழலாம்..

இந்த பழனிச்சாமியிடம் மனுகொடுப்பதை விட மோடி கார் டிரைவருக்கு மனுகொடுக்க வேண்டியதாய் இருக்கும் நிலையில் அவர்கள் இருக்கின்றார்கள், அய்யோ பாவம்

அந்த மனிதனின் தேவை கலைத்துறைக்கு புரிகின்றது, ஆனாலும் ஒரு வாழ்த்து சொல்ல தோன்றவில்லை

இது நன்றிகெட்ட தனம்,

இந்த துறையினரை விடுங்கள், அடையாளம் தந்தவனையே மறந்த நன்றிகொன்ற பாவம் செய்கின்றார்கள்

இரு கட்சிகள்தான் இன்னும் கலைஞருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை, முதலாவது கட்சி அதிமுக. அதன் தலைவர் யாரென்று அவர்களுக்கே தெரியவில்லை. பொதுவாக தீவிரவாத இயக்கங்கள் தங்கள் தலைவனை அறிவிக்காது, அறிவித்தால் எதிரி கொன்றுவிடுவான் எனும் பயம்

இவர்களுக்கு அந்தபயமெல்லாம் இல்லை, தன் தலமை யாரென தெரியவே இல்லை,அந்த பரிதாபத்தில் அவர்கள் நிலை இருக்கின்றது

இன்னொரு வாழ்த்து தெரிவிக்காத கட்சி எது தெரியுமா? சீமானின் நாம் தமிழர் கட்சி

“மகனே சைமன், இனி எங்காவது தமிழன் நாகரீகம் தெரியுமா? அவனின் பெருந்தன்மை தெரியுமா? என எங்காவது வாயை திறந்தால்…”, அன்று இருக்கின்றது