பொன்னார் செயலும் பேச்சும் மகா காமெடியாகவே இருக்கின்றன..

“வயதானவர்களைக் கொண்டு வைரவிழாவினை கொண்டாடியிருக்கின்றார்கள்” : பொன்னார்

முதிர்ந்த வயதான கலைஞரை வாழ்த்த அவரோடு பயணித்த முதிர்ந்தவர்கள் தான் வருவார்கள், சிறுவர்களா சென்று வாழ்த்த முடியும்?

வாஜ்பாயினை வாழ்த்தியது எல்லாம் பாஜக இளைஞர்களா? முதிர்ந்த அத்வாணிதானே முன்னின்று வாழ்த்தினார்..

56 வயது யுவதி தமிழிசை கூட வாஜ்பாயினை வாழ்த்தவில்லையே அய்யா? ஏன்?

வாஜ்பாயினை அந்த முதிர்ந்த பார்பண கூட்டம் வாழ்த்தும்பொழுது நீங்கள் இந்தியாவில்தானே இருந்தீர்கள், அதெல்லாம்

மறந்துவிட்டதா மிஸ்டர் பொன்னார்.

கலைஞரை வாழ்த்த தகுதி இருக்கும் முதியோர் வந்தார்கள், வயதில் குறைந்தாலும் கட்சி தலைவராக ராகுல் வந்தார்.

இளமை இருக்கின்றது என சீமானையும் அவன் அடிப்பொடிகளையுமா அழைக்க முடியும்??

அது சரி மிஸ்டர் பொன்னார்? பின் எப்படி கூட்டம் வரவேண்டும்?

ஆண்டி சாமியார்களும், பண்டாரங்களும் வரவேண்டுமா?

உங்கள் அரசியல் வாழ்வு அந்த பண்டார சாமியார்களோடும், ஆண்டி மடங்களோடும் இருந்தால் அதற்கு திமுகவையா சாடுவீர்கள்?

என்னமோ தெரியவில்லை அனைத்து சீரியஸ் காமெடிகளையும் தமிழக பாஜக குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கின்றது..

அவர்கள் செயலும் பேச்சும் மகா காமெடியாகவே இருக்கின்றன..