வளைகுடா ஒற்றுமை அவசியம்
வளைகுடா ஒற்றுமை அவசியம்: சவுதி அரேபியா மன்னரிடம் தொலைபேசியில் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் அல்லது எடப்பாடிக்கும் ஆதரவு, தினகரனுக்கும் ஆதரவு என்பது இதுதான்
வளைகுடா நாடுகள் ஒற்றுமை இல்லாமல் இருக்க காரணமே அன்னாரின் திருவிளையாடல்தான், சமீபத்தில் இவர் சென்று சவுதிக்கு தருவதாக சொன்ன ஆயுதங்களும், அதனை தொடர்ந்து ஈரானுக்கும் கத்தாருக்கும் எழுந்த அச்சமே இந்நிலைக்கு காரணம்
இதில் அந்நாடுகள் ஒற்றுமையுடன் இருக்க டிரம்ப் கோருகின்றாராம்
இரு நாடுகளிலும் அமெரிக்க ராணுவம் உண்டு, சவுதியுடன் எல்லையினை பங்கிடும் நாடு எனும் வகையில் கத்தாரும் அமெரிக்காவிற்கு தேவை..
தீவிரவாதத்திற்கு சவுதியும் கத்தாரும் இன்னும் பல நாடுகளும் உதவுவது பரம ரகசியம் அல்ல, சன்னி பிரிவு தீவிரவாதிகளுக்கு எந்நாளும் சவுதி ஆசி உண்டு
ஆனால் உலகளாவில் சில சர்ச்சை வந்தவுடன் கத்தார் அப்படித்தான், நாங்கள் சுத்தம் என்பது போல பேசுகின்றது சவுதி..
அந்த பிராந்தியம் ஒற்றுமையாய் இருக்க முதல் வழி அமெரிக்காவினை வெளியேற்றுவது , இரண்டாவது இந்த சன்னி ஷியா பிரிவுகளை அகற்றி ஒரே இஸ்லாமியமாக கொண்டு வருவது
ஆனால் இந்த இரண்டும் சாத்தியமா என்றால் இல்லை, அமெரிக்கா கூட எண்ணெய் இல்லை என்றால் வெளியேறும்,
ஆனால் இரண்டாவது பிரச்சினை தீரவே தீராது