சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணி கூட்டத்தி கலவரம்
சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மகளிர் அணி கூட்டத்தி கலவரம், அடி உதை நடந்திருக்கின்றது, இதில் ஆச்சரியபட என்ன இருக்கின்றது
அவர்கள் கலாச்சாரம் அது, சின்னம் என்ன என்பதை அருகிலிருப்பவர் கன்னத்திலும், முதுகிலும் பதித்து கட்சி விசுவாசம் காட்டுவார்கள், முன்பு வேட்டி கிழிந்து, செருப்புகள் பறந்ததில் அதன் வாசலில் ஒரு வேட்டிகடையும், செருப்பு கடையுமே திறக்கபோன அளவிற்கு வீர வரலாறுகள் உண்டு
இப்பொழுது மகளிர் முறை, அதுவே நடந்திருக்கின்றது, இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை, மகளிர் மட்டும் சளைத்தவர்களா?
“ஆணுக்கு பெண் இளப்பமில்லை” என் சொல்லி, கும்மி அடித்திருக்கின்றார்கள்
குஷ்பூ அங்கு இல்லை, மயிலில்லா இடத்தில் சில சிட்டுகுருவிகள் கத்தத்தான் செய்யும்.
அக்கட்சியின் பெண்களே வீரம் காட்டியபின், இனி ஆண்கள் “கை”வண்ணம் காட்ட கிளம்பினால் என்னாகும்?
இதில் உச்சகட்ட காமெடியாக, விசாரணை நடத்துகின்றோம் என திருநாவுக்கரசர் சொல்கின்றார்
பின் இவர்தான் விசாரிக்க வேண்டும்? சிபிஐ விசாரணையா கோர முடியும்