திருமுருகன் காந்தியின் கைது பற்றி இலங்கை அமைச்சர் தொண்டைமான் கண்டனம்

திருமுருகன் காந்தியின் கைது பற்றி இலங்கை அமைச்சர் தொண்டைமான் கண்டனம் தெரிவித்திருக்கின்றாராம்

என்ன அநியாயம் இது? தமிழக அரசோ, இந்திய அரசோ ஈழ உணர்வாளர்களை கைது செய்யும் பொழுது இவர்களின் ஆலோசனையோ அல்லது அனுமதியோ வேண்டுமா? அப்படி என்ன அதிகாரம்

ஒன்றுமில்லாமல் இருக்கும்பொழுதே இப்படி பேசுபவர்கள், ஒருவேளை 9ம் அதிசயமாக ஈழம் அமைந்திருந்தால், தமிழகத்து முடிவுகளை எல்லாம் அவர்கள்தான் எடுத்திருப்பார்களோ??

தமிழக அரசு என்ன செய்யவேண்டும், செய்ய கூடாது என யாழ்பாணத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கலாம், நல்ல வேளையாக தமிழகம் தப்பித்தது

தமிழக மீணவர்களை சிங்களன் சுடும்பொழுதெல்லாம் பேசாத, படகுகளை பறிக்கும்பொழுதெல்லாம் தொண்டையில் மீன் மண்டையினை வைத்திருந்த தொண்டைமான், திருமுருகன் என்றால் மட்டும் பேசுவாராம்

தமிழகத்து ஈழ அகதிகள் துர்வாழ்வு பற்றியோ, ராஜிவ் கொலையில் சிக்கியிருக்கும் 4 ஈழ தமிழர்கள் பற்றியோ வாய்திறக்காத தொண்டைமான் திருமுருகனுக்கு ஏன் பேசுகின்றார்??

தமிழக அரசுக்கு உத்தரவிடும் உரிமையினை இவருக்கு கொடுத்தது யார்?

எப்படிபட்ட மோசடி அரசியல் இது, இது நிச்சயம் ஏற்றுகொள்ளமுடியாத விஷயம்.

ஈழதமிழர்களின் உணர்வு என்றுமே வித்தியாசமானது, இதோ சிங்கள இனவாதம், சிங்கள இனவெறி என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்த இலங்கை தமிழர்களில் பலபேர் இலங்கை வெற்றி, மாபெரும் வெற்றி, இந்தியாவிற்கு எதிராக அட்டகாசமான வெற்றி என சிலாகித்து உணர்ச்சி பெருக்கில் “ஜெய் லங்கா” என சொல்லிகொண்டிருக்கின்றான்

அவர்களுக்குத்தான் இங்கிருந்து ஈழம், போர், தனிஈழம் என பலர் சொல்லிகொண்டே இருக்கின்றான் பைத்தியமாக‌

அவர்களோ லங்காடா, இந்தியாவினை ஓட அடிப்போம் , சிறீலங்கா வாழ்க என சொல்லிகொண்டே இருக்கின்றான்

இதில் இங்கிருந்து அவனுக்கு ஈழ ஆதரவு தரும் இவனா? அல்லது முள்ளிவாய்க்கால் என அழுதுவிட்டு இலங்கை வாழ்க என சொல்லும் அவனா? யார் பைத்தியம் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்..

தொண்டைமானுக்கு வண்டிவண்டியாக‌ கண்டனங்கள்..