ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை
ஓசூர், சேலம், நெய்வேலிக்கு விமான சேவை: தமிழக அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்து
விமான நிலைய விஷயத்தில் முதலில் செய்யவேண்டியது சென்னை விமான நிலைய விரிவாக்கம், உள்நாட்டு முனையம் இடிந்து விழுகின்றது, பன்னாட்டு முனையத்திலும் ரன்வெயிலும் நெருக்கடி
ஆக முதல் தேவை சர்வதேச தரத்தில் பெரும் விமான நிலையத்தை சென்னை புறநகரில் அமைப்பது
அடுத்து மதுரையினை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றவேண்டும், தென்னக பெரும் பிரச்சினை தீரும்
திருச்சி விமான நிலைய கொள்ளைக்கு முடிவு கட்டவேண்டும்
இவைதான் மிக அவசரமாக செய்ய வேண்டிய விஷயங்கள்
அதனை செய்யவில்லை மாறாக ஏதோ வெற்று கனவில் இருந்துகொண்டு அறிவிக்கின்றார்கள்,
இந்த அறிவிப்புகள் எல்லாம் கேரளம், ஆந்திரா போன்றவற்றின் பன்னாட்டு விமான நிலையத்தினை வளர்க்குமே அன்றி தமிழகத்தில் ஒன்றுமே இருக்காது
தமிழகத்தில் ஏன் பன்னாட்டு விமான நிலையம் பெருகவில்லை என்றால் அதுவும் ஒரு வகையான காவேரி, முல்லைபெரியார் பிரச்சினைதான், ஆனால் இதனை பற்றி யாரும் பேசமாட்டார்கள்
ஏன் என்றால்? தமிழக நலன் பற்றி காமராஜர் காலத்திற்கு பின் டெல்லியில் யார் பேசினார்கள்? ஒருவரும் இல்லை