மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தால் பெரும் கலவரம் வெடித்திருக்கின்றது
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தால் பெரும் கலவரம் வெடித்திருக்கின்றது
இது பாஜக ஆட்சி அல்லாமல் வேறு மாநில ஆட்சி என்றால் இப்பொழுது இந்திய பத்திரிகைகள் வரிந்து கட்டியிருக்கும், அந்த அரசினை டிஸ்மிஸ் செய் என்ற அளவு எழுதியிருப்பார்கள்
ஆனால் பாஜக மத்திய அரசு, பாஜக மாநில அரசினை டிஸ்மிஸ் செய்தால் மகா கேவலம் அல்லவா? அதனால் எல்லா பத்திரிகையும் கண்டும் காணாமலும் செல்கின்றன
இதனை ஆளும் மாநில கட்சி பாஜக, மத்திய அரசும் பாஜக என்பதுதான் முரண். ஆக பாஜக அரசுகள் விவசாயிகளை கைவிட்டுவிட்டன என்பது மத்திய பிரதேச விவசாயிகளின் ஏமாற்றம்
தமிழகத்தில் என்ன நடக்கின்றது? நிச்சயம் விவசாயிகளுக்கு எந்த வருடமும் இல்லா ஏமாற்றம் இந்த வருடம், இது அவர்களுக்கு சபிக்கபட்ட ஆண்டு , அரசும் இயற்கையும் ஒரு சேர வாட்டி வதைக்கும் ஆண்டு.
இந்த தமிழகத்தில் பெரும் விவசாய போராட்டம் வெடித்திருக்க வேண்டும், அப்படி செய்தால் அது தமிழக அரசுக்கு சிக்கலாகும்
அதனை அய்யாகண்ணு போன்றோர் கொடுக்காமல் , டெல்லிக்கு அம்மணமாய் ஓடினர், ஒரு பயனும் கிடைக்கவில்லை
இப்பொழுது மத்தியபிரதேச விவசாயிகள் போல இங்கும் குரல் எழும்ப வேண்டும், ஆனால் எழும்பவில்லை ஏன்?
இதுதான் தமிழக அரசியல், விவசாயி முதல் பிச்சைக்காரன் வரை எல்லா இடங்களிலும் புகுந்துவிட்ட அரசியல், அது இருக்கும் வரை தமிழகம் உருப்படாது..
ம.பி விவசாயிகளாவது பாஜக என எதிர்க்கலாம், தமிழக விவசாயிகள் பாஜக, அதிமுக என பல கட்சிகளை எதிர்க்கவேண்டும் , பின் எங்கிருந்து தீர்வு கிடைக்கும்?