தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சீனி

தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் சீனி கலப்படம் வந்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன‌

இன்னும் அரசு சார்பில் சத்தமில்லை, அவர்கள் இது கள்ளா? பாலா? நீ சொல்லு நந்த லாலா? என்ற பால் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கின்றார்கள்

இப்பொழுது பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை சர்ச்சை வந்தவுடன் ஒரு தரப்பு சமாளிக்கின்றது, அது நுகர்வோர் அமைப்பாம், ஆனால் கிட்டதட்ட தெர்மாகோல் செல்லூர் ராஜூ பாணியில் பதில் சொல்கின்றது

எப்படி?

பிளாஸ்டிக் அரிசி,சீனி செய்வது எளிதல்ல, அதற்கு நிறைய செலவாகும் அதனால் அது சாத்தியமில்லை

எப்படிபட்ட பொருளாதர அறிவு பார்த்தீர்களா? காரல் மார்க்ஸ், ஜாண் மேத்யூ, அமர்த்தியா சென், மன்மோகன் சிங் உட்பட யாராவது இதற்கு பதில் சொல்லமுடியுமா?

அட பதர்களா? எவனாவது விலைகுறைந்த வெண்கலத்துடன் செலவு மிகுந்த தங்கம் கலந்து விற்க நினைப்பானா? அல்லது வெண்கலத்தோடு கலக்க செலவு குறைந்த உலோகமாக பார்க்கமாட்டானா?

100 கிலோ மூட்டையில் 80 கிலோ அரிசியும் 20 கிலோ பிளாஸ்டிக் அரிசியும் கலந்தால் 100 கிலோ ரெடி எனும்பொழுது பிளாஸ்டிக் அரிசியின் விலை அந்த 20 கிலோ அரிசியின் விலையினை விட குறைவாகத்தான் இருக்கமுடியும் என்பது நேற்று பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கும் புரியுமே?

சீன மெஷினில் பிளாஸ்டிக்கினை போட்டால் அழக்காக செதுக்கி அரிசி போலே கொடுத்துவிடுகின்றது, மிக மிக செலவு குறைவு, அந்த அரிசி பெரும் அரிசி சந்தைகளையே கிழக்காசியாவில் ஆட்டிவைத்துகொண்டிருக்கின்றது, நாடுகள் அலறிகொண்டிருக்கின்றன‌

இப்படி கொஞ்சமும் சிந்திக்காமல் பேசுபவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு என்பதுதான் கொடுமை

பிளாஸ்டிக் அரிசி இந்தியாவில் செய்யபடுவது அல்ல, எங்கோ செய்யபட்டு இங்கு கலக்கபடுவது என்பது கூட இவர்களுக்கு தெரியவில்லை.

தமிழக மக்களுக்கு பெரும் சிக்கலான நிலை, மாட்டுகறி, பால் என தொடரும் சர்ச்சை இப்பொழுது அரிசிக்கு வந்திருக்கின்றது

இன்னும் எதிலெல்லாம் தொடருமோ தெரியாது, அரசுக்கோ இதைபற்றி கொஞ்சமும் கவலை இல்லை

பிளாஸ்டிக் அரிசி என்பது ஒன்றுமல்ல, தெர்மாக்கோல் கலந்த நீர் வயலில் பாய்ந்து, நெல்மணிகளில் சில தெர்மாக்கோல் போல ஆகிவிட்டன அவ்வளவுதான் என இவர்கள் விரைவில் சொல்வார்கள்,

பொறுத்திருந்து பாருங்கள்..