ஒரு சலசலப்பு ஓடிகொண்டிருக்கின்றது, எடப்பாடிதான் தொடங்கினார்

ஒரு சலசலப்பு ஓடிகொண்டிருக்கின்றது, எடப்பாடிதான் தொடங்கினார், அதாவது ஸ்டாலின் அதிமுக அரசினை கவிழ்க்க சதி செய்கின்றார் என்பது அது.

அதிமுக ஆட்சியினை கவிழ்க்க மிரட்டல் சதி செய்வது யாரென்றால் அது உலகிற்கே தெரியும், சாட்சாத் அவர்கள்தான்

இனியொரு காலம் அவர்களுக்கு வாய்க்காது, அதனால் பன்னீரோ, எடப்பாடியோ, தினகரனோ ஆளாளுக்கு தங்களுக்கு எது ஆதாயமோ அதற்காக ஆட்சி கவிழ்ப்பு , அது இது என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

இவர்களில் யாருக்கும் ஆட்சி கவிழ விருப்பமேயில்லை, அதனை கவிழவிடமாட்டார்கள்,, மாறாக இப்படி சொல்லி சொல்லி மிரட்டி ஆட்சியில் காரியம் சாதிப்பார்கள்

இதுதான் இப்பொழுது நடக்கின்றது, இன்னும் நடக்கும்

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் ஸ்டாலின் திமுக ஆட்சியினை கவிழ்க்க முயற்சிக்கவில்லை அல்லது விரும்பவிலை என்பது உண்மை

அதற்கான முயற்சியில் அவர் கொஞ்சமும் இறங்கவில்லை, சட்டபேரவையில் கூட நியாயமான வாக்கெடுப்பு கோரினாரே அன்றி ஆட்சி டிஸ்மிஸ் செய்ய அல்ல‌

அவரின் அரசியல் புரியவில்லை, கலைஞரின் அரசியல் இது அல்ல, இது எப்படியான அரசியல் என காலம்தான் சொல்லும்

மற்றபடி திமுக பழனிசாமியின் அரசை கவிழ்க்க சதி என்பதெல்லாம் காமெடி ரகம், அந்த எம் எல் ஏக்கள் எவ்வளவுதான் விடாபிடியாக தம்கட்டி இருந்தாலும் ஆட்சி தோல்வி என்பது நாள்தோறும் தமிழகம் அறிந்தது கொண்டிருக்கின்றது

அதனால் ஏதாவது ஒரு தீரா சிக்கலில் அந்த அரசு சிக்கி கவிழும் அல்லது நீங்கும் அதனை தடுக்க முடியாது

அதிமுக அரசு என்பது பட்டுவிட்ட மரத்தின் உச்சியிக் கட்டியிருக்கும் பறவை கூடு, மரமே வீழும் பொழுது அப்பறவைகள் விருப்பமில்லை என்றாலும் கலைந்துதான் தீரவேண்டும்

அதனால் பழனிச்சாமி கோஷ்டி ஸ்டாலினை சாடுவதில் அர்த்தம் இல்லை, மாறாக இற்றுகொண்டிருக்க்கும் அக்கட்சியின் வேர்களை பார்ப்பது நல்லது..


நாங்கள் அதிமுகவினை இயக்கவில்லை : பாஜக மறுப்பு

பின் ஏன் அம்மணி பன்னீர்செல்வம் மோடியினை சந்திக்கின்றார், நீங்கள் வேறு சும்மா இருக்காமல் விரைவில் தேர்தல் வரும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றெல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றீர்கள்

நீங்கள் அடிக்கடி இந்த‌ அரசு நீடிக்காது என சொல்வதுதான் இந்த கேள்விகளுக்க்கெல்லாம் மூலம்

ஆக நீங்கள் வாய்பேசாமல் இருந்தாலே இந்த சந்தேகம் யாருக்கும் எழாது,

வாயால் சிக்குவது தவளை மட்டுமா?