தமிழகத்தின் விடிவு எப்போது?

உ பிரதேசத்தை தொடர்ந்து நேற்று மஹாராஷ்ட்ராவும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து விட்டன. உ,பி செய்த மொத்த தள்ளுபடி 36000 கோடி ரூபாய்.

தமிழகத்தில் வறட்சியால் விவசாய கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொன்டோர் 400 பேர். தமிழக விவசாயிகள் பல முனை போராட்டங்களை டெல்லி வரையில் நடத்தி எந்த முடிவும் கிடைக்காத நிலையில் இன்னமும் தொடர்ந்து போராடுகிறார்கள். 
கடுமையான வறட்சி நிலவுவதும் விவசாயத் தொழிலே அழிவின் விளிம்பில் நிற்பதும் நம்மால் பார்க்க முடிகிறது.

ஏன் தமிழக அரசு கண் மூடி மொளனம் காக்கிறது?

நிதிநிலை மிக மோசமாக உள்ள உ பி அரசு தள்ளுபடி செய்த 36000 கோடியை கடனாக பெறுகிறது. அந்த கடனுக்கு உத்திரவாதி (guarantor) மத்திய அரசு. எதன் அடிப்படையில் உத்திரவாதம் அளிக்கிறது என்றால் 36 மாநிலங்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய்களின் அடிப்படையில். இந்திய மொத்த வரி ஆண்டு வாருவாயின் 50% சதவீத வாருவாய் தமிழகம், கர்நாடகம், மராட்டிய மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்கள் மூலமே கிடைக்கிறது. மராட்டிய குடிமகன் சராசரியாக ஏறக்குறைய தலைக்கு ரூபாய் 32000 மும் தமிழக கர்நாடக குஜராத் குடிமக்கள் சராசரியாக தலைக்கு சுமார் ரூ20000 மும் மைய அரசுக்கு வரியாக/ ஆண்டுக்கு கொடுக்கிறார்கள். ஆனால் உ பி மேற்கு வங்கம்,ம.பிரதேசம், பீகார் மாநிலங்கள் தம் பங்காக தலைக்கு சராசரியாக சுமார் ரூ 6000 செலுத்துகிறது,

நம் தமிழகம் மைய அரசுக்கு செலுத்தும் 100 ரூபாயில் 34 ரூபாயை தமிழக அரசுக்கு திரும்ப கிடைக்கும் . மீதி66% தொகை மற்ற மாநிலங்களின் நிதி தேவைகளுக்காக பகிர்ந்தளிக்கப்படும். நம் தமிழகத்திற்கு ரூ34 மட்டுமே கிடைக்கும் அதே வேளையில் உ,பி அரசு செலுத்தும் ரூ100 க்கு மைய அரசு திரும்ப உ. பிக்கு அளிக்கும் பங்கு சுமார் ரூ200. ஆம் இதுதான் உண்மை .

மொத்த இந்தியாவின் கட்டமைப்பின் பெரும் பங்களிப்பு நம் 4 மாநிலங்களையே சாரும். 
இவ்வளவு பெறும் பங்களிப்பை தரும் தமிழகம் தம் உரிமைகளை கேட்டு வாங்க நாதியில்லை. நமது வரிப்பணத்தில் உதவி பெறும் உ.பி 36000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்கிறது. மைய அரசு உ பிக்கு செவி சாய்க்கிறது. டெல்லியில் நம் விவசாயி மானமிழந்து நிர்வானமாகவும் போராடி விட்டான். நம் விவசாயிகளின் போராட்டத்தை எள்ளளவும் அவர்கள் மதிக்கவில்லை. 
வரி கட்டுபவன் விரல் சூப்பி நடுத்தெருவில் கேட்பாரற்று நிற்கிறான். நாம் என்ன பிச்சையா கேட்கிறோம் ? உரிமையைத் தானே கேட்கிறோம்

நம் விவசாயிகளின் போராட்டம் நியாயம் தானே?

தமிழகத்தின் நிர்வாகம் ஒவ்வொரு துறையிலும் சீரழிந்து கிடக்கிறது. உரிமையை போராடிக் கேட்க வேன்டிய அதிமுக அரசு பதவி சுகத்தை காப்பாற்றி கொள்ள டெல்லியில் மன்டியிட்டு கிடக்கிறது.

தமிழகத்தின் விடிவு எப்போது?