ஜிஎஸ்டி, மாட்டுகறி முதல் நாட்டில் ஏகபட்ட பிரச்சினைகள் உண்டு
ஜிஎஸ்டி, மாட்டுகறி முதல் நாட்டில் ஏகபட்ட பிரச்சினைகள் உண்டு, சட்டசபை கூட்டத்தில் அதுபற்றி எதிர்கட்சி விவாதித்திருக்கலாம்
விவசாயிகளுக்கு இந்த அரசு என்ன செய்கின்றது? என மல்லுகட்டியிருக்கலாம், மதுக்கடை தொடர்பாக இந்த அரசின் திட்டம் என்ன என்பதை கேட்டிருக்கலாம்
தமிழகத்திற்கு தேவையான அத்தியவாசிய திட்டங்களை சட்டசபையில் எடுத்து போட்டு விளாசியிருந்தால் பழனிச்சாமி முதல் சபாநாயகர் வரை ஓட்டம் பிடித்திருப்பார்கள்
ஆனால் ஸ்டாலின் அதனை செய்யாமல் வீடியோ,பேரம் என எதனையோ பேசி அரசியல் செய்வதாக நினைத்து தடுமாறிவிட்டார்
அந்த அதிமுகவினருக்கும் சுத்தமாக அறிவில்லை, தம்மா துண்டு அரசியல் ஞானம் இருந்தால் இப்படி கேட்டிருப்பார்கள்
“முன்பு நீரா ராடியா கனிமொழி ஆடியோ, பூங்கோதை உபாத்யா ஆடியோ, ஜாபர் சேட் கனிமொழி ஆடியோ என எவ்வளவு ஆடியோ வந்தது, அதனை பற்றி எல்லாம் சட்ட சபையிலா விவாதித்தீர்கள்?”
இப்படி கேட்டால் ஸ்டாலினால் ஆர்ப்பாட்டம் செய்திருக்க முடியும்?
அதிமுகவினருக்கும் அரசியல் தெரியவில்லை, ஸ்டாலினுக்கும் மக்கள் நலன் மீது அக்கறையில்லை