எஸ்.வீ சேகருக்கும், சுப.வீக்கும் சண்டை நடக்கின்றதாம்…..

எஸ்.வீ சேகருக்கும், சுப.வீக்கும் சண்டை நடக்கின்றதாம், அவாளை பார்ப்பான் என சொல்ல கூடாதாம், அது நல்ல சொல் இல்லையாம்..

பார்ப்பான் என்ற சொல்லை பாரதியாரே பயன்படுத்தியிருக்கின்றார், அவரே பிராமணர்தான்.

பஞ்சாங்கம் பார்ப்பவன், ஜாதாகம் பார்ப்பவன் கூடவே அதனை வைத்து நல்ல வருமானம் பார்ப்பவன் எனும் வகையில் அது பார்ப்பணம் ஆயிற்று, இது பாரதிக்கு முன்பிருந்த சொல்

இப்பொழுது அது எஸ்.வீ சேகருக்கு வசைச்சொல் ஆயிற்றாம், அப்படி சொல்ல கூடாதாம்

பின் அய்யா என்ன எதிர்பார்க்கின்றார்?

பிராமணர்களை அய்யர்வாழ், அய்யங்கார், குருக்கள், சாஸ்திரிகள், ஆச்சாரியர் என மிக மரியாதையாக அழைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார் போல..

நடக்குமா? அதுவும் எஸ்.வீ சேகரையா?