ரஜினி ஜிஎஸ்டி பற்றி கருத்து சொல்லாதது ஏன் : டி.ஆர் சீற்றம்
ரஜினி ஜிஎஸ்டி பற்றி கருத்து சொல்லாதது ஏன் : டி.ஆர் சீற்றம்
அட போங்க சார், அந்த ரஞ்சித் எடுத்த படத்தினை ரஷ் போட்டு பார்த்துவிட்டு மனிதர் அரண்டுவிட்டார் போல, அத்தோடு அமெரிக்காவிற்கே ஓடிவிட்டார், படம் அப்படி ரஜினியே அஞ்சும் படி வந்திருக்கலாம்
அவர் எதில் அய்யா பேசினார்? அணுவுலை முதல் கதிராமங்கலம் வரை ஏதாவது பேசினாரா? பேசி ஒன்றும் ஆகாது என்பது அவருக்கு தெரியாதா?
சமீபத்தில் தமிழக மக்களை அச்சுறுத்திய AAA படம் பற்றி கூட சொன்னதில்லை, இதில் ஜிஎஸ்டி பற்றி அவர் ஏன் சொல்லவேண்டும்?
அவருக்கு தன் ரசிகர்கள் மீது நம்பிக்கை இருக்கின்றது, எத்தனை பெரும் வரி என்றாலும் தனக்காக தன் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் எனும் பெரும் நம்பிக்கை இருக்கின்றது, அவர் அஞ்சவில்லை
டி.ஆருக்கு அப்படி நம்பிக்கை ஏதுமில்லை, அதுவும் சமீபத்தில் மகனை பார்த்தபின் கடுப்பு ஏறி இருக்கலாம், அல்லது மதுரை மைக்கேலை பார்த்து தன் மீதே கோபம் வந்திருக்கலாம்
மனிதர் சீறிகொண்டிருக்கின்றார்