அத்திமரம் அபசகுணமா?
அத்திமரங்கள் அபசகுணமாம், அதனால் உபி முதல்வர் ஹிட்லர் பாணியில் மொத்தமாக அழிக்க சொல்லிவிட்டாராம்
இதன் பிண்ணணி வேறுமாதிரியானது, எல்லா மதங்களிலும் அத்திமரம் அடையாளம் உண்டெனினும் கிறிஸ்தவ பைபிளிலும், இஸ்லாமிய விஷயங்களிலும் அத்திமரம் அடிக்கடி வரும்
இவர்களுக்கு அந்த பிண்ணணி கொண்ட அத்திமரம் அபசகுணமாக இருப்பதால் ஆச்சரியமில்லை
வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
இயேசுநாதர் பைபிளில் ஒரு இடத்தில் அத்திமரத்தில் பழம் தேடினார், அது கிடைக்கவில்லை என்பதால் ஒழிந்து போ என சபித்தார், இந்த யோகி அப்படி ஏதும் பழம் தேடினாரோ என்னமோ?? வாய்ப்பு இல்லை
ஏகபட்ட விஷயங்கள அபசகுணம் என்கின்றன சாஸ்திரம், விறகு சுமக்கும் பெண், விதவை பெண், என பல விஷயங்கள் அபசகுணம் என்கின்றன, ஒற்றை பிராமணன் கூட அபசகுணமாம்
இனி உபியில் விற்கு சுமக்கும் பெண், ஒற்றை பிராமணன், குறுக்கே ஓடும் பூனை என எல்லாவற்றையும் அழித்துவிடுவாரோ?
அத்திமரம் அபசகுணமா?
நாளை பிரதமர் மோடி இஸ்ரேல் செல்கின்றார், அந்நாட்டின் தேசிய மரமும், தேசிய அடையாளமும் அத்தி மரமே
அத்திமரத்திற்கு அவ்வளவு பெரும் அந்தஸ்தை கொடுத்த அந்த தேசம்தான் இன்று உலகை மிரட்டும் மிகபெரும் சக்தியாக உருவெடுத்திருக்கின்றது
அத்திமரத்தை அபசகுணம் என சொல்லும் இந்நாட்டின் பிரதமர், அத்திமரத்தை கொண்டாடும் இஸ்ரேலில் கால் பதிக்கின்றார்
என்ன செய்ய போகின்றார் யோகி?
அது அபசகுணம் பிடித்த மரம், அங்கே போகாதீர்கள், அவர்கள் உதவி, தொழில்நுட்பம், எதுவுமே நமக்கு வேண்டாம் என சொல்ல போகின்றாரா?
சொன்னால் இஸ்ரேலியர் என்ன? உலகமே வாய்விட்டு சிரிக்காதா?