நிர்மலா சீத்தாராமன் பேச்சில் கடுமை இருக்கலாம் ….

Image may contain: 1 person, smiling, close-up

அந்த நிர்மலா சீத்தாராமன் பேச்சில் கடுமை இருக்கலாம், வீட்டிலே சாப்பிட்டால் என்ன என்ற வரிகளில் அபத்தம் இருக்கலாம்

அதற்காக அவர் ஆணவம் பிடித்தர், திமிர் பிடித்தவர் என்பதெல்லாம் சொல்ல கூடாத குற்றசாட்டுகள். அரசியலுக்கு ஒரு பெண் வரும்பொழுது இயல்பான அச்சத்தை மறைக்க கொஞ்சம் தைரியமாக பேச முயற்சிப்பார்கள்

நிர்மலா சீத்தாராமன் அதனை செய்யலாம், சில தடுமாற்றங்களை மறைக்க அதித துணிவோடு காட்டிகொள்ளலாம்

அதற்காக அவர் ஆணவம் பிடித்தவர், பார்பணீய திமிர் என்பதெல்லாம் சரியல்ல‌

ஜெயா என்றொருவர் இருந்தார், 7 மாதம் முன்பு வரை உயிரோடு இருந்தார், அதற்கு 3 மாதம் முன்பு வரை 25 ஆண்டுகளாக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார், ஆணவத்தின் உச்சியில் இருந்தார்

அதுதான் ஆணவம், அதுதான் பார்ப்பண திமிர், அதுதான் நான் மகாராணி எனும் அகங்காரம்.

அவரை கண்டிக்க திராணியற்றவர்கள் , ஆணவக்காரி ஜெயா காலத்தில் கம்மென்று இருந்தவர்கள், கூவத்தூரில் ஆணவ சசிகலா உத்தரவிடும்பொழுது குப்புற கிடந்தவர்கள் எல்லாம இன்று நிர்மலா சீத்தாராமனை ஆணவக்காரி என சொல்லிகொண்டிருக்கின்றான்.

அவர் கருத்துக்களை சாடலாமே அன்றி, பார்பண திமிர் என்பதெல்லாம் சரியே அல்ல‌

தமிழிசை தமாஷாக‌ பேசுவதைத்தான் அவர் சீரியசாக பேசுகின்றார், அவ்வளவுதான் விஷயம்.

இரண்டுமே காமெடி வகைதான்

தமிழிசையினை விட்டுவிட்டு மட்டும் நிர்மலா சீத்தாராமனை சீண்டுவதன் பெயர்தான் “பார்ப்பன வெறுப்பு”


“அ.தி.மு.க-வில், செல்வாக்கு பெற்ற தலைவர் யாருமில்லை” : வானதி சீனிவாசன்

தமிழக பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் நோபல் பரிசு பெற்று, ஐ.நாவில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்கள்

தொடர்ந்து 234 தொகுதியிலும் பிரச்சாரத்திற்கு செல்லாமலே பல தேர்தல்களில் ஜெயித்து வருமளவிற்கு செல்வாக்கு மிக்கவர்கள்

ஏம்மா..அந்த அதிமுகவின் கழுத்தை பிடித்து அமுக்கி கொண்டு இப்படி எல்லாம் சொல்ல உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?????