யார் இந்த யாசின் மாலிக்?

Image may contain: 3 people, people smiling, people sitting and text

காஷ்மீரில் ஒரு தலைமறைவு தீவிரவாதி , அதுவும் மிக கொடிய தீவிரவாதி, அவன் தலைக்கு பல லட்சம் பரிசு என சொன்ன தீவிரவாதி நமது பாதுகாப்பு படையினரால் கொல்லபட்டிருக்கின்றான்

அவன் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட யாசின் மாலிக், அதனை கண்டித்து முழு அடைப்பு நடத்த போவதாக சொல்லிகொண்டிருக்கின்றான், ஏதும் நடந்தால் அவனையும் பிடித்து உள்ளே போட அரசு தயாராகின்றது

யார் இந்த யாசின் மாலிக்?

காஷ்மீர் பிரிவினை வாத தலைவன், தமிழகத்தில் இவனை அழைத்து வந்து சீமான் மாநாடு எல்லாம் நடத்தினார்

எங்கே? காங்கிரஸ் ஆட்சியில் யாசின் மாலிக்கை அழைத்து கூட்டம் போட்ட சைமன் இப்பொழுது யாசினை அழைத்து கூட்டம் போடட்டும் பார்க்கலாம்

அல்லது காஷ்மீர் சென்று ஏ இந்திய ஏகாதிபத்தியமே என சீமான் சீறட்டும் பார்க்கலாம்,

யாசின் மாலிக்கிற்கு ஆதரவாக தமிழகத்தில் நாங்கள் அடைப்பு நடத்துவோம், ஊர்வலம் நடத்துவோம் என சொல்லட்டும் பார்க்கலாம்

முன்பு காஷ்மீர் மக்களுக்கு தமிழர்களின் ஆதரவு, ஏ இந்திய ராணுவமே வெளியேறு என ஊளையிட்ட இந்த தமிழ் உணர்வாளர்களையும் காணவில்லை,

எங்கே சென்றார் சைமன்?? வந்து கத்துவாரா?

அவரையே காணவில்லையே, பின் அவரின் குரலை எங்கே தேடுவது?

ஆக காங்கிரஸ் அரசில் சீமானால் கத்த முடிந்திருக்கின்றது, யாசின் மாலிக்கோடு கை கோர்த்து சுற்றமுடிந்திருக்கின்றது, இந்த அரசு சீமான் அப்படி செய்தால் குமட்டில் குத்த தயாராகின்றது

காங்கிரஸ் ஆட்சியில்தான் 4 வார்த்தை பேசமுடிந்தது என்ற முடிவுக்கு சீமானும் வந்திருப்பார், அதனால் அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான் வேண்டும் என்ற ரகசிய ஆசை அவர் மனதிலும் வந்திருக்கும்

அடுத்த தேர்தலில் காங்கிரசினை சீமான் ஆதரிக்க பெரும் வாய்ப்பு உள்ளது,