ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு குழம்புதான் பொருத்தம், அதுதான் அதிருசி

ஒவ்வொரு வகை அரிசிக்கும் ஒவ்வொரு குழம்புதான் பொருத்தம், அதுதான் அதிருசி

இன்றோ ஒரே வகை அரிசிக்கு எல்லா வகை குழம்புகளையும் பொருத்தமில்லாமல் ஊற்றி உண்கின்றோம்

நீண்ட ஆராய்ச்சிக்கு பின் இந்த ஞானம் எனக்கு கிடைத்துவிட்டது

ஒவ்வொரு வகை குழம்பிற்கும் ஒவ்வொரு வகை அரிசி சோறுதான் பெரும் சுவையினை கொடுக்கின்றது, இந்த பொருத்தம் மிக முக்கியம்

பொன்னி அரிசிக்கு வத்த குழம்பு, சம்பா அரிசிக்கு மீன் குழம்பு, புழுங்கல் அரிசிக்கு சாம்பார்,ரசம், சீரக சம்பா அரிசிக்கு கத்தரிக்காய், பாசுமதி அரிசி சோறுக்கு 
ஆட்டுகறி, நடுத்தரமான அரிசிக்கு கோழிகறி
சட்னிக்கு பச்சரிசி வகையறா என மிக அழகாக பொருந்துகின்றது

ஆக குழம்பு மட்டும் ருசியல்ல, அரிசியிலும் விஷயம் இருக்கின்றது, சரியான காம்பினேஷன் மகா முக்கியம்

ஆராய்ச்சியின் ஒரு பகுதியினை வெற்றிகரமாக முடித்து அறிக்கை சமர்பித்தாயிற்று, முடிந்தால் நீங்கள் முயற்சித்துபாருங்கள்