அரிசி பற்றி சொன்னால் கூட பொங்குகின்றார்கள்

அரிசி பற்றி சொன்னால் உடனே மன்னார்குடி, திருவாரூர்க்காரகள் எல்லாம் பொங்குகின்றார்கள்

அரிசி பற்றி உனக்கு என்ன தெரியும் என கடுமையான சத்தம், அரிசி பற்றி அவர்களுக்கு மட்டும்தான் தெரியுமாம்

அரிசி என்பது ஜப்பான் முதல் இந்தியா வரை விளையும், ஆப்ரிக்காவில் கூட உண்டு, தமிழகத்தில் அரிசி பிற்காலத்தில்தான் வந்தது என்கின்றார்கள்

சம்பா என்பது வியட்நாமில் இன்றும் உள்ள ஊர், நல்ல அரிசிக்கு அதுதான் பிரசித்தம் அங்கிருந்துதான் நெல் தமிழகத்திற்கு பரவிற்று, விதை அங்கிருந்துதான் வந்தது என்பது ஒரு ஆராய்ச்சி

நெல் அரிசி தமிழருக்கு ஆதிகால உணவல்ல, பிற்காலத்தில்தான் வந்தது என்றும் ஒரு வரலாற்று முடிவு உண்டு

ஆக உலகெல்லாம் ஒவ்வொருவகை அரிசி உண்டு ஜப்பான், சைனா , விய்ட்நாம்,பாகிஸ்தான், பர்மா, தாய்லாந்து என அரிசியில் முத்திரை பதித்த நாடுகள் உண்டு

உலகெல்லாம் கிட்டதட்ட 300 வகையான அரிசி உண்டு, இந்தியாவில் 150 வகை இருக்கலாம், அக்கால தமிழகத்தில் 100க்கும் மேலான நெல்ரகங்கள் இருந்திருக்கின்றன‌

தமிழகம் என எடுத்துகொண்டாலும் அம்பாசமுத்திரம், திருவைகுண்டம், நாஞ்சில் நாடு, பொள்ளாச்சி பக்கம் என பெரும் நெற்களஞ்சியங்கள் உண்டு

திருநெல்வேலி என்றே அதற்கு பெயர், “நெல்லை” என்றே அழைக்கபடுகின்றது, அவர்களுக்கு தெரியாத “நெல்”லா?

கொட்டாரம் சம்பா முதல் அம்பை 16 எனும் நெல்ரகம் வரை தென்னக மாவட்டகளுக்கு அத்துபடி.

என்னவோ காவேரி கரையில் இருப்பனுக்கு மட்டும்தான அரிசி தெரியும் என்பது போலவும், மற்றவன் எல்லாம் கால்பிடி சோளத்திற்கு காத்திருந்தவன் போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள்

இதோ காவேரி டெல்டா வறண்டு விட்டது, ஒரு சொட்டு நீர் இல்லை

உடனே உலகெல்லாம் அரிசி பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றதா? உலகம் அரிசி கிடைக்காமல் தவிக்கின்றதா?

இந்த “மன்னார்குடி” “திருவாரூர்”காரர்கள் எல்லாம் ஒரு மாதிரியாகத்தான் இருப்பார்கள் போல, இவர்கள் அரசியலில் வேறு ஆதிக்கம் செலுத்தினால் எப்படி இருக்கும்?