கணித மேதை ராமானுஜம்

Image may contain: 6 people, people smiling, textஇந்திய கணித அறிவின் அடையாளமாக விளங்கியர் ராமானுஜம், அவரின் வாழ்க்கை படத்தினை இப்பொழுதுதான் பார்க்க வாய்ப்பு வந்தது

மிக அழகாக ராமானுஜனின் வாழ்க்கையினை சொல்லியிருக்கின்றார்கள், பெரும் அறிவாளியான அவன் வறுமையில் வாடியது, வெள்ளையர்கள் லண்டனுக்கு அழைத்து அவனை பட்டை தீட்டியது, பெரும் கடவுள் நம்பிக்கை கொண்ட ராமானுஜம் இறுதிவரை அசைவம் தொடாமல் நோயுற்று செத்தது வரை அட்டகாசமாக செதுக்கியிருக்கின்றார்கள்

எப்படிபட்ட மேதை ராமானுஜம், இன்றைய கணிப்பொறி காலத்திலும் அவன் கணக்கு இல்லாத விஞ்ஞான வசதியில்ல்லை, இன்றைக்கும் அவன் விட்டு சென்ற ஆராய்ச்சி எல்லா கணிதவிலாளருக்கும் பிரமிப்பே

அந்த ராமானுஜனை வெள்ளையன் அடையாளம் கண்டுகொண்டான், இன்று எத்தனை ராமானுஜன்கள் இட ஒதுக்கீட்டால் வீணாய் போனார்களோ தெரியாது, அவர்களை கைதூக்கி விட வெள்ளையனும் இல்லை

அது இருக்கட்டும்

பிராமண சமூகம் என்பதால், சொந்த இனத்தால் எப்படி எல்லாம் அவன் பாரதி போல ஒதுக்கபட்டிருக்கின்றான் என்பது பெரும் கொடுமை, அப்படி ஒரு காலம் இருந்திருக்கின்றது

அதனை விட பெரும் கொடுமை 32 வயதில் இறந்த அவனுக்கு சந்ததி இல்லை, நான் எழுதிய இந்த கணித ஆராய்ச்சிதான் என் வாரிசுகள் என சொல்லி அவன் இறந்த காட்சியில் மனம் வலிக்கத்தான் செய்கின்றது

இந்த குஷ்பூ படங்களை பார்த்ததில் சில நல்ல படங்களை தவறவிட்டிருக்கின்றேன், இவ்வளவு தாமதாக பார்த்திருக்க கூடாது

கும்பகோணத்தில் பிறந்த மாமேதைக்கு அங்கு பெரும் அடையாலமில்லை, ஆனால் அங்கு சிறுவயதில் குடியேறிய அந்த ம.கொ ராமசந்திரனுக்கு கோவிலே உண்டு, தமிழக நியாயம் இது

இந்த தமிழனின் வரலாற்று படம் தியேட்டர்களில் ஓடவே இல்லையாம், எப்படி கொண்டாடபட்டிருக்க வேண்டிய படம் கொஞ்சமும் ஓடவில்லையாம்

பின் அந்த தியேட்டர்கள் எதற்கு தமிழகத்தில் திறந்திருக்க வேண்டும்? ஒரேடியாக மூடிவிட வேண்டியதுதான்