இஸ்ரேலில் நமது பிரதமர்….
இஸ்ரேலிய புண்ணிய ஸ்தலங்களை சுற்றி பார்க்கின்றார் மோடி
(வி.கே ராமசாமி பாணியில் வாசிக்கவும்)
“ஏம்பா..அந்த இயேசுநாதர இங்கதான் அடக்கம் பண்ணீங்களா, அந்த கல்லறைய ஒழுங்கா மூடப்புடாது? அரைகுறையா மூடியிருக்காங்க உங்க ஆளுங்க
அந்த ஆள் திரும்ப வந்து உங்களுக்கும் பிரச்சினை, எங்களுக்கும் பிரச்சினை
இதுக்குத்தான் எங்க ஊருல எல்லாம் ஒருத்தன கொன்னவுடனே எரிச்சிருவோம்,
இனியாவது எவனையும் கொன்னா எங்க பாணில எரிச்சிருங்க, எங்க முன்னோர்கள் ஒண்ணும் முட்டாள்கள் இல்ல”
“யூத பெண்கள் எல்லாம் பேரழகிகள் என்றார்கள், ஆனால் உங்களை எல்லாம் விட மிக அழகாக எங்கள் நாட்டில் குஷ்பூ என்றொருவர் இருக்கின்றார்,
உங்கள் நாட்டு அழகிகள் எல்லாம் அவர் முன் நிற்க முடியாது”
ஹிட்லரால் கொல்லபட்ட யூதர்களுக்கான அஞ்சலி செய்யும் இடமாம்
“கிறுக்கு பயலுக, குஜராத் இனபடுகொலையாளி என சொல்லபட்ட என்னையும் அழைத்து இன்னொரு இனபடுகொலைக்கு அஞ்சலி செலுத்த வைக்கிறானுக
சிரிக்காம வச்சிட்டு போயிரணும், முகத்துல சிரிப்பு வருது, வழக்கமா கேமராவ பாக்குற மாதிரி இப்பொ பாத்து தொலைத்துவிட கூடாது பெருமாளே”
இதுதான் இஸ்ரேலிய தந்தை தியோடர் ஹெர்சில் கல்லறையாம், அஞ்சலி செலுத்தவேண்டுமாம்
எவனாவது நாட்டின் தேசதந்தைக்கு அஞ்சலி செலுத்துவானா? எங்கள் ஊரில் எல்லாம் தேசதந்தையினை கொன்றவனுக்குத்தான் அஞ்சலி செலுத்துவோம்
இவர் எப்படி செத்தார்? எவன் கொன்றான் என இவரிடம் எப்படி கேட்பது?
இந்த ஊரில் அப்படி எல்லாம் கொல்லமாட்டார்கள் போல, வித்தியாசமான ஊராக இருக்கின்றது
நெசமாவா? இது விவசாயமா? கோவணம் கட்டி வயல்ல இறங்காம இப்படி எல்லாம் விவசாயம் செய்ய முடியுமா?
கம்பியூட்டர் முன்னால இருந்தா இங்க விவசாயம் பண்றீங்க? இதுல இருந்தே எல்லா விவசாய வேலையும் செய்யலாமா? எவ்வளவு
ஆச்சரியம்?
எப்படிபட்ட நாடுடா இது?
அது சரி, யோகா செய்யாம, சமஸ்கிருதம் படிக்காம எப்படி உங்களுக்கு இவ்வளவு அறிவும் ஆரோக்கியமும்,
மாட்டுகறி தின்னாலும் எப்படி இவ்வளவு அறிவு?
(இஸ்ரேலிய விவசாய பண்ணையில் மோடி)
“என் அண்ணன் ஜோனத்தன் நேத்தன்யாகு இஸ்ரேலுக்காக உகாண்டாவில் விமானத்தை மீட்கசென்று உயிர்விட்டவர், நானும் 6 நாள் போரில் சண்டையிட்டுருக்கின்றேன், இங்கெல்லாம் நாடுதான் முக்கியம், அதனால் நாட்டுக்காக போராடியவர்கள் தான் பிரதமராக முடியும் , அப்படித்தான் நான் பிரதமராக முடிந்தது.
எங்களுக்கு நாடா முக்கியம்? மாடுதான் முக்கியம் அதனால்தான் என்னை வைத்திருக்கின்றார்கள்
அப்படியா? இது நாட்டுக்காக துப்பாக்கி பிடித்த கை, டீ ஆற்றிய கையினை விட வலுவானது, வேண்டுமானால் தொட்டு பாருங்கள்..”
உள்ளூரில் இப்படி குல்லா வைத்தால்
சும்மா விடமாட்டார்கள், அந்த இஸ்லாமியரின் குல்லாவினை, அவர்களின் பங்காளியான யூதர்களுடன் வைத்தால் ஒரு பயலும் கண்டுகொள்ளமாட்டான்
யூதம் ஒரு வகையில் நாகரீகமான இஸ்லாம், இஸ்லாம் இன்னமும் பழமையான யூதம் என்பதெல்ல்லாம் எவனுக்கு தெரியும்?
அதனால் தலையில் இது யூத குல்லா என சொல்லி அணியலாம்..”