மிஸ்டர் சகாயம் , உங்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்தது?

Image may contain: 1 person

தமிழகத்தில் பலருக்கு ஒரு கணக்கு இருந்திருக்கின்றது, அதாவது கலைஞர் ஓய்ந்தார், ஜெயாவும் இல்லை இனி நமக்கும் ஒரு அரசியல் வட்டம் வரும் என ஆளாளுக்கு கனவில் இருந்திருக்கின்றார்கள்

மிகபெரும் கனவெல்லாம் அவர்களுக்கு இருந்திருக்கின்றது

அந்த கனவில் கடற்கரை மண்ணை அள்ளிபோடும் நபராக ரஜினி ஒருவர்தான் தெரிகின்றார்

அதனால் அவரை மிரட்டுகின்றார்கள், அவர் அரசியலுக்கு வரகூடாது என புரண்டு அழுகின்றார்கள், சிலர் தங்களை கொளுத்திகொள்ள கூட தயாராகின்றார்கள்

இவர்கள் உண்மையில் தமிழர் நலம் காப்பவர்கள் என்றால் அன்றே ஜெயா அரசியலுக்கு வர தகுதியற்றவர் என சொல்லியிருக்கலாம், ஜெயா ஆட்சியினை விட இன்னொரு கேவலமான ஆட்சி இருக்க முடியாது

அதற்கு ஒரே சவால் இப்போதிருக்கும் அதிமுக ஆட்சிதான்

ஆக ஜெயாவினை எல்லாம் வெளியே போ என சொல்லாதவர்கள், இன்னும் அரசியலுக்கே வராத ரஜினியினை உள்ளே வராதே என்கின்றார்கள்

தமிழக நலம் முக்கியம், நல்லாட்சி முக்கியம் என்றால் இவர்கள் ரஜினியோடு இணையலாம், வாருங்கள் ரஜினி அரசியலுக்கு வாருங்கள், வாக்கினை வாங்கி தாருங்கள் நாங்கள் மாற்றத்திற்கு துணை நிற்கின்றோம் என சொல்லலாம்

அப்படி ஒரு பயலும் சொல்லவில்லை, சொல்ல மனமில்லை மாறாக ரஜினி வராதே என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

சீமான் முதல் இன்னபிற அல்ட்ராசிட்டிகள் அப்படி, இதில் உதயகுமாரும் சேர்ந்து கொண்டதும் சிறிய அதிர்ச்சி

மிஸ்டர் சகாயம் , உங்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்தது? நீங்களுமா பசுதோல் போர்த்திய நரி??

மற்றவர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லையா? நீங்கள் இந்திய ஆட்சியியல் அதிகாரி, இந்தியர் என்ற உணர்வோடு இருக்க வேண்டியவர், தமிழர் மராட்டியர் எனும் வேறுபாட்டினை ஒரு இந்திய கலெக்டர் எப்படி ஊக்குவிக்கலாம்

இது உங்கள் தகுதிக்கும், பதவிக்கும் எவ்வளவு இழிவானது?

இந்த பெரும் கொடுமையினை செய்துவிட்டு, நீங்கள் வகிக்கும் இந்திய கலெக்டர் எனும் பதவிக்கு துரோகம் செய்துவிட்டு நீங்கள் லஞ்சம் வாங்கினால் என்ன? வாங்காவிட்டால் என்ன?

பல்லாயிரம் கோடி லஞ்சம் வாங்குவதை விட கொடுமையான விஷயம் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டிய ஒரு கலெக்டர் நான் தமிழன் என பாகுபாடு காட்டுவது

ச்சீ ச்சீ, இது எவ்வளவு பெரும அவமானம்?? ஒரு பொறுப்பான இந்திய‌ போலிஸ் ஐபிஎஸ், நான் இந்த இனம், நீங்கள் எல்லாம் இங்கு அரசியல் செய்ய கூடாது, நான் தான் செய்வேன் என ஒரு இனத்தின் பெருமை பேசினால் அது எவ்வளவு பெரும் கொடுமை, நாடு தாங்குமா?

அதனைத்தான் நீங்கள் செய்கின்றீர்கள், உங்கள் மீதான மதிப்பு, எதிர்பார்ப்பு எல்லாம் நொறுங்கி கிடக்கின்றது, நீங்கள் கலெக்டர் பதவிக்கே பெரும் அவமான துரோகம் இழைத்துவிட்டீர்கள்

இதுவரையில் என்ன குற்றம் செய்தார் ரஜினி? அல்லதுஅவர் மேல் அப்படி பயமா?

கோடிகணக்கான ஊழல் கிரானைட் வழக்கினை விசாரித்து, இப்படி எல்லாம் மக்கள் பணம் கொள்ளையடிக்கபட்டுள்ளது, இதற்கு ஜெயா அரசே பொறுப்பு, அவர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என என்றாவது சொன்னீர்களா?

இல்லை, அப்படி சொல்லாமல் ரஜினியினை எந்த தகுதியில் நீங்கள் எதிர்க்கின்றீர்கள்? ரஜினியினை எதிர்க்கும் தகுதியினை நீங்கள் இழந்தே விட்டீர்கள் ஐயா

உங்களுக்கு எல்லாம் என்ன? மக்கள் ஆதரவோடு நல்லாட்சி அமைய ரஜினி காந்தினை நீங்கள் ஆதரித்தால் என்ன? மக்கள் நலம் முக்கியம் என்றால் அதனை செய்யலாம்

மாறாக இவர்கள் எல்லாம் சுயநல கூட்டம், நெஞ்சமெல்லாம் ஒருவித வன்மம்

இவர்கள் இப்படி அரசியல் அனாதைகளாக அலைவதுதான் தமிழகத்திற்கு நல்லது என்பது போல் தெரிகின்றது, இப்படியே அலையட்டும்