சட்டமன்ற கூட்டதொடரை எளிதாக நடத்திவிட்டது அதிமுக அரசு
சட்டமன்ற கூட்டதொடரை எளிதாக நடத்திவிட்டது அதிமுக அரசு, திமுக பெரும் சவால் எல்லாம் கொடுக்கவில்லை, வெளிநடப்போடு சரி
குட்கா விவகாரம் உட்பட பல விஷயங்களில் திமுக கோட்டை விட்டது, அடித்து ஆடவேண்டிய அந்த விவகாரத்தில் திமுக சமாளித்து ஒதுங்கியது எல்லாம் ஹிஹிஹிஹ் ரகம்..
இன்னும் என்னென்ன விஷயங்களில் சறுக்குமோ தெரியவில்லை , இந்த இத்துபோன அரசுக்கே சவால் கொடுக்க தெரியவில்லை என்றால் என்ன சொல்ல?
அன்றைய கலைஞர் திருச்செந்தூர் வைரவேல் உட்பட பல பிரச்சினைகளில் நடைபயணம் செய்து சட்டசபையில் சீறிய திமுகவிற்கும், இன்று மல்லாக்க கிடக்கும் திமுகவிற்கும் வித்தியாசம் தெரிகின்றது
1987ல் எம்ஜிஆர் இறந்ததும் சம்பிரதாய அஞ்சலிக்கு பின் கலைஞர் வெறிபிடித்தது போல இயங்கினார், அவர் கால்படாத தமிழக மண் இல்லை
எம்ஜிஆர் இல்லை, அதிமுக சிதறி கிடக்கின்றது, இந்த கடும் உழைப்பு ஏன் என்ற கேள்விக்கு அவரின் பதில் இப்படி இருந்தது
“யோவ், இப்பொழுதும் ஜெயிக்க முடியலைண்ணா எப்பவும் முடியாதுய்யா, அதிமுக ஜெயிக்கலண்ணா அது அவங்க பிரச்சினை, நாம ஜெயிக்க ரெடியாக வேண்டாமா?” என சொல்லி உழைத்தார்
அந்த உழைப்பும், அந்த விழிப்பும் துடிப்பும்தான் கலைஞர், திமுக எனும் கட்சி உயிரோடும் துடிப்போடும் அப்படி அவரால்தான் இருந்தது
இன்றைய காட்சிகளை பார்க்கும் பொழுது செயல் தலைவரின் வேகம் காணாது, திமுக எனும் பெரும் சேனைக்கு இதனை விட பல மடங்கு துடிப்பு வெண்டும்
ஜெயா இல்லை, இனி நம்மை தவிர தமிழகத்திற்கு நாதியில்லை என்ற எண்ணம் திமுகவினருக்கு வருமானால் அது நல்லதல்ல
ஸ்டாலின் உண்மையில் நமக்கு நாமே நடைபயணம் செல்லவேண்டிய நேரம் இதுதான், இதனை சொன்னால் தளபதிக்கு எல்லாம் தெரியும் என்பார்கள்
1987 கலைஞரை நினைத்துவிட்டடு தளபதிக்கு எல்லாம் தெரியும் என நல்ல திமுகவினர் சொல்ல மாட்டார்கள்
“ஹோட்டல் என சொல்லிவிட்டு டாஸ்மாக் திறந்துவிட்டார்கள்” : மக்கள் வேதனை
அட இதாவது பரவாயில்லை, ஜெயாவிற்கு மாற்று சின்னம்மா என்றொரு முதலையினை முதல்வராக்க பார்த்தார்கள், எப்படியோ நடக்காமல் போனது
அப்படிபட்ட ஆட்சியில் இதெல்லாம் எவ்வளவு சாதாரண விஷயம் தெரியுமா?
‘ஜிகா’ வைரசால் உயிருக்கு ஆபத்து இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
அது என்னமோ ஜில்ஜில்ஜிகா விஷயம் போல பேசிகொண்டிருகின்றார், ஜிகா என்றால் என்னவென்றே தெரியாது போல
உலகமே அஞ்சி நடுங்கும் ஒரு கொடூர வைரஸ் பற்றி தமிழக அமைச்சரின் பொறுப்பான பதிலை கண்டீர்களா?
இவர் டாக்டர் வேறாம், போலி டாக்டராக இருக்கலாம்
இந்த அறிவிப்பினை உலகம் கண்டால் வாய்விட்டு சிரிக்காதா? இப்படிபட்ட கும்பலா தமிழகத்தை ஆள்கின்றது?
எவ்வளவு பெரும் இருண்டகாலத்தில் தமிழகம் சிக்கியிருக்கின்றது
அது ஆபத்து இல்லை என அமைச்சர் சொல்லிவிட்டதால், அந்த ஜிகா வைரசினை இவர் உடலிலே ஏற்றி பரிசோதிக்கலாம்
அமைச்சர் தயாரா?
கதிராமங்கலத்திற்கு எம்.எல்.ஏ எம்பி என சிலர் இருப்பார்கள் அல்லவா?
அவர்கள் இருக்கின்றார்களா? இல்லை கதிராமங்கலம் அப்படி யாரும் இல்லாத அந்நிய நாட்டு பகுதியா?