சிவசேனா பாஜகவினை கலாய்க்கின்றது

“அமர்ந்தாத்தில் தாக்கிய கொலையாளிகளை கொல்ல பசுபாதுகாவலர்களை அனுப்ப வேண்டும். பயங்கரவாதிகள் கையில் பசுமாட்டுகறி இருந்தால் அவர்களை இவர்கள் எப்பொழுதோ கொன்றிருப்பார்கள் ” : சிவசேனா

எப்பொழுதும் மிக சர்ச்சையான கருத்துக்களை சொல்லும் சிவசேனா, இப்பொழுதெல்லாம் மிக அழகான கருத்துக்களை சொல்ல தொடங்கிவிட்டது

பிஜேபிக்கும் அதற்கும் எங்கோ முட்டிகொண்டபின் சிவசேனா கொஞ்சம் மாறிவிட்டது

அவர்கள் சொல்லவரும் விஷயத்தில் நியாயம் இல்லமால் இல்லை

இந்தியாவில் கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அமர்ந்தாத் தாக்குதல் நடத்தபட்டிருந்தாலும் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை

நாளை அந்த தீவிரவாதிகள் 10 பசுமாட்டை சுட்டுவிட்டால் நிச்சயம் பெருங்கலவரம் வெடிக்கலாம், நாடு அப்படி ஆகிவிட்டது

நாடு முழுக்க பசுமாடுகள் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், இனி பாகிஸ்தானிய தீவிரவாதிகளின் இலக்கு இந்திய மக்கள் அல்ல,

மாறாக இந்திய பசுமாடுகள்

சிவசேனா அதனைத்தான் சொல்லி பாஜகவினை கலாய்க்கின்றது