நெடுவாசலில் சில மாவோயிஸ்டுகள் ?

நெடுவாசலில் சில மாவோயிஸ்டுகள் என செய்திகள் வருகின்றன‌

மாவோவின் சீனா அங்கு செய்துகொண்டிருக்கும் இயற்கை அழிவு கொஞ்சமல்ல, இடுக்கு விடாமல் தோண்டி குவிக்கின்றார்கள், ஒரு பயல் எதிர்த்து கேட்க முடியாது

சுரங்க விபத்து முதல் இன்னும் ஏராள விபத்துக்களுக்கு அந்த எல்லையற்ற சுரண்டலே காரணம்

கிராமபுற சீனர்கள் எல்லாம் நகர்புறங்களுக்கு படையெடுத்து வருகின்றார்கள், தொழிற்சாலைகளில் தரமோ பாதுகாப்போ இல்லை

ஆலையின் மாசுக்களிலும், புகையிலும் சிக்கி சீன நகரங்கள் மிக நெருக்கடியில் இருக்கின்றன, மிக பெரும் நகரம் என சீன புறநகர்பகுதிகள் தான் சொல்லபடுகின்றன‌

ஆக அங்கே நடக்கும் இயற்கை சூறையாடலும், சுரண்டலும், அடக்குமுறையும் மிக மிக அதிகம்

ஆனால் அந்நாடுதான் இங்கு மாவோ பெயரை எவன் சொன்னாலும் ஆயுதமும் பணமும் அள்ளிகொடுக்கின்றது, இந்தியாவில் குழப்பம் விளைவிக்க அவர்களுக்கு அவ்வளவு ஆசை

இந்த அறிவுகெட்டவர்களும் அந்நாட்டில் எப்படி எல்லாம் இயற்கையினை அழிக்கின்றார்கள்,எப்படி எல்லாம் மக்களை அடக்கி வைக்கின்றார்கள் , எப்படி எல்லாம் மிக பெரும் வெளிதெரியாத அடக்குமுறை இருக்கின்றது என தெரியாமல் மாவோயிஸ்ட் என சொல்லிகொண்டு இங்கு கொடி பிடிக்கின்றார்கள்

இந்நாட்டில் மாவோயிஸ்டாக இவர்கள் எழுப்பும் குரலை, மாவோவின் சீனாவில் எழுப்ப முடியுமா என்றால் நிச்சயம் முடியாது, அதுதான் இந்நாட்டின் சுதந்திரம்

ஆக இந்த மாவோயிஸ்டுகள் பற்றி இந்திய மக்கள் கொஞ்சம் விழிப்ப்பாய் இருப்பது நலம்

மாவோவின் சீனா எவ்வளவு அட்டகாசங்களை அந்த மக்கள் மீது நிகழ்த்துகின்றது என தெரிந்துவிட்டு இப்பக்கம் வரட்டும், மாறாக அவர்களின் எச்ச உதவியினை ஏதோ புரட்சிக்கு அடிப்படை என கருதி, நாங்கள் மாவோயிஸ்ட் என சொல்வார்களானால் அரசு செய்யவேண்டியதை செய்யட்டும்

ஒன்றுமட்டு உண்மை, நாளையே மாவோயிஸ்டுகள் கையில் அதிகாரம் கிடைத்தால் கூட இந்நாடோ, மாநிலமோ பசுமையாகாது

மாறாக இதே ஹைட்ரோ கார்பன், மணல் குவாரி, தாதுமணல் எல்லாம் மிக வேகமாக நடக்கும், நடக்கத்தான் செய்யும், ஆனால் ஒரு முணுமுணுப்பு கூட காட்டமுடியாது, கொன்றே விடுவார்கள்

இவர்களிடம் மகா விழிப்பாய் இருக்கவேண்டியது இந்திய மக்களின் கடமை, அடித்து சீனாவிற்கே விரட்டவேண்டிய அபாயம் இவர்கள்