வைரவன் : என்ன மனிதர் இவர்?
காமராஜருக்கு சமையல்காரனாக வேலைக்காரனாக இருந்தவர் வைரவன்
காமராஜரை அவர்தான் கூடவே இருந்து கவனித்துகொண்டார், உணவு முதல் மருந்துவரை அவர்தான் கொடுத்துகொண்டிருந்தார்
நெடுங்காலம் காமராஜரை கண்மணிபோல பார்த்துகொண்டது சாட்சாத் வைரவன் தான், காமராஜரின் எல்லா பேச்சுக்களையும், சிந்தனைகளையும், அழுகையினையும், பொய் பழிகளை ஏற்று அவர் மனதால் அழுததையும் அருகிருந்து பார்த்தது அந்த வைரவன் தான்
இப்பொழுது அதற்கென்ன என்கின்றீர்களா?
அந்த வேலைக்காரன் தான் அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அவனின் உறவினர்கள்தான் தமிழக காங்கிரஸில் எல்லாம் நிறைந்திருந்து, சத்யமூர்த்தி பவனை கைபற்றியிருக்க வேண்டும்
குடும்பமில்லாமல் ஒரு தலைவன் / தலைவி செத்தால் அவனுக்கு பின் வேலைக்காரர்கள் தான் பதவிக்கு வரவேண்டும் என்பது தமிழக விதி, அப்படித்தான் வந்திருகின்றார்கள்
ஆனால் அந்த வைரவனும் பிழைக்க தெரியாதவானக இருந்திருக்கின்றான், காமராஜரோடு சேர்ந்தால் அந்த புத்திதான் வரும்
ச்சே.. என்ன மனிதர் இவர்? அவருக்குத்தான் அறிவில்லை, தியாக தலைவனை காத்திருந்த தீக்குச்சியே வருக, தீப எண்ணையே வருக என அழைக்க அந்த காங்கிரஸ்காரர்களுக்கும் சிந்தனையில்லை
1967ல் தோற்றாலும் திண்டுக்கல் இடைதேர்தல் உட்பட பல இடங்களில் காமராஜருக்கு செல்வாக்கு இருந்தது, அன்றைய ஆளும் கட்சிக்கு பதற்றமும் இருந்தது
உச்சமாக ராமசந்திரன் பிரிந்து சென்று காமராஜர் கதவினை தட்டியதும் அன்றைய ஆளும் கட்சிகளுக்கு அச்சமே
காமராஜர் எது சொன்னாலும் அவர் முதல்வராக ஆசைபடுகின்றார் என்ற பதில் அரசுதரப்பிடமிருந்து வந்துகொண்டே இருந்தது
எம்ஜிஆரை ஏன் நீங்கள் சேர்க்கவில்லை , அப்படி சேர்த்தால் ஆட்சியினை கைபற்றலாமே என்ற ஆலோசனைகள் காமராஜருக்கு வைக்கபட்டன
அமைதியாக சொன்னார் காமராஜர்
“இவர்கள் எல்லாம் அமர்ந்துவிட்ட பின் அந்த முதலமைச்சர் பதவியில் நான் இருந்தேம்ணா அது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம்னேன்”
ராக்கெட் ராஜா போன்றவர்கள், சரத்குமார் போன்றவர்கள், சில சங்க நிர்வாகிகள்.
காமராஜர் சிலைக்கு மாலையிடாமல் பாதுகாப்பதுதான் நாடார் சமூகம் காமராஜருக்கு காட்டும் உச்சபட்ச மரியாதையாக இருக்க முடியும்