இஸ்ரேல் ஒரு தந்திரக்கார நாடு
அணுகுண்டை விட ஆபத்தான காரியத்தில் இஸ்ரேல் இறங்கிவிட்டது, மிக மிக உணர்ச்சிகரமான அல் அக்சா விவகாரத்தில் கை வைத்துவிட்டது, உலகம் பொங்கிகொண்டிருக்கின்றது
இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ஓரணியில் திரண்டுகொண்டிருக்கின்றன
அதாகபட்டது சாலமோன் கட்டிய அந்த ஆலயம், ஆபிரகாம் அல்லது இப்ராஹிம் நபி தன் மகனை பலிகொடுக்க துணிந்த இடம் எல்லாம் இருக்கும் வளாகம் பைத்துல் முகஸ்துஸ்
இந்த வளாகத்தில்தான் டூம் ஆப் ராக் எனப்படும் மசூதி, யூத அழும் சுவர், அல் அக்சா எனப்படும் ஓலை மசூதி எல்லாம் உண்டு
இஸ்லாமியருக்கு மூன்றாம் புனித மசூதி அதுதான், யூதருக்கு ஒரே கோவில் இருந்த இடம் அதுதான், கிறிஸ்தவர்களுக்கும் அது முக்கியமான இடம், இதனை கைபற்றத்தான் சிலுவை போர்கள் எல்லாம் நடந்தன
இஸ்ரேலின் குறி இதுதான், ஆனால் எப்படி நெருங்கினார்கள்? முதலிலே இதனை கேட்டால் இஸ்ரேல் அமைந்திருக்காது, அதனால் தந்திரமாக அணுகினார்கள்.
மத அடையாளத்தை தாண்டி அது பெரும் பழமை வாய்ந்தது, யுனெஸ்கோ போன்ற அமைப்புகள் எல்லாம் அதனை அப்படி அங்கீகரித்திருக்கின்றன,
ஆலயம் கட்ட வேண்டுமானால் இஸரேல் எங்கும் கட்டலாம், அவர்களிடம் இல்லா பணமா அறிவா? இந்த மசூதியினை இடித்துவிட்டுத்தான் கட்டவேண்டுமா?
இந்த கேள்வி மிக நியாயமனாது, மிக பழமையான கட்டிடத்தை இடிப்பது ஏற்றுகொள்ளமுடியாதது, அது ஒரு இன அழிப்பு அல்லது பெரும் கொடூர கொலை, ஆனால் இஸ்ரேல் எதனை ஏற்கும்?
எங்கள் வாழ்வே இந்த மசூதியினை இடித்துவிட்டு ஆலயம் கட்டுவது என நிற்கும் கும்பலிடம் என்ன பேச முடியும்?
முதலில் பாலஸ்தீனத்தில் ஒரு பகுதி வேண்டும் என்றார்கள்,பின் ஜெருசலேமில் ஒரு தெரு வேண்டும் என்றார்கள், பின் பாதிவேண்டும் என்றார்கள் பின் அவர்களாக மொத்த ஜெருசலேமினை கைபற்றினார்கள்
ஆனால் அல் அக்சா மசூதியினை தொடவில்லை
பின் கொஞ்சம் கேரள பாணியில் இறங்கினார்கள், மசூதி பழுது என்றார்கள், பின் ராமர் கோவில் பாணியில் அகழ்வாராச்சி செய்தார்கள், ஏன் என்று கேட்டால் எங்காவது சாலமோன் ஆலய அடித்தளம் இருக்கிறதா என சோதிக்கின்றோம் மசூதிக்கு ஆபத்தில்லை என சொன்னார்கள்
அப்பொழுதே அராபத் இண்டிபாதா எல்லாம் நடத்தி உலகின் கவனத்தை எல்லாம் ஈர்த்தார், அவரையும் வீட்டுகாவலில் வைத்து பின் அவரும் இறந்தார்.
பின் மசூதிக்கு அடியிலே தோண்டினார்கள், சுவரில் கீறல்கள் விழுந்தன, உடனே பார்த்தீர்களா, இதில் பலமில்லை என அன்றே சொன்னோம் என்கின்றார்கள்
அகழ்வாராய்ச்சி என தோண்டியதும், மசூதியினை பாழ்படுத்தியதும் அவர்கள், இன்று அன்றே சொன்னோம் அல்லவா? தொழுகையில் இடிந்துவிழுந்தால் யார் பொறுப்பு? என அடைத்துவிட்டார்கள்
ஆம் அல் அக்சா மசூதி வெள்ளிகிழமை அடைக்கபட்டுவிட்டது, கேட்டால் பரமாரிப்பாம்
அன்று வெள்ளிகிழமை தொழுகை நடக்கவில்லை, வரலாற்றில் வெகு சில நாட்களில் நடைபெறாமல் போன கொடும் காலத்தில் கடந்த வெள்ளியும் இடம்பெற்றுவிட்டது
இன்னும் மசூதி திறக்கபடவில்லை. இஸ்லாம் உலகம் கொந்தளிக்கின்றது
இதனை இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லையா என்றால் நிச்சயம் எதிர்பார்த்தார்கள், உலகம் எப்படி ரியாக்ட் செய்கின்றது என சோதிக்கின்றார்கள்
உலக எதிர்ப்பு பலமாக இருந்தால் மசூதி தப்பும், பெரும் எதிர்ப்பு இல்லாவிட்டால் விரைவில் மசூதி தகர்க்கபட்டு மூன்றாம் தேவாலயம் அமைக்கபடும்
எப்படி எல்லாம் தந்திரமாக நகர்கின்றார்கள்? இப்படி ஒரு தந்திரக்கார நாடு எங்காவது உண்டா?
இன்று அவர்களை அரேபியால் எதிர்க்க ஆளுமில்லை, சவுதி ஏமனுடன் சண்டை, ஈராக் சிரியா ஐஎஸ்சுடன் சண்டை, இன்னும் சில அடிமைகள் அமெரிக்காவிற்கு சலாம் என காட்சிகள் மாறிகிடக்கின்றன
அணுகுண்டு செய்துவிட்டுத்தான் இஸ்ரேலை எதிர்க்கவேண்டும் என்ற வெறியில் ஈரான் எங்கோ முட்டிகொண்டு நிற்கின்றது
எப்படியாயிலும் இந்த புனிதமான மசூதியினை இஸ்லாமிய நாடுகள் விட்டுகொடுக்காது, கிழக்காசிய நாடுகள் முதல் அமெரிக்க முஸ்லீம்கள் வரை பொங்குகின்றன
நிச்சயமாக உலகில் இரண்டாம் பெரும் மக்கள் தொகையில் இஸ்லாமியர் வாழும் நாடு இந்தியா, பாகிஸ்தான் எல்லாம் அதற்கும் குறைவுதான்
இந்திய இஸ்லாமிய மக்களின் குரல் வேகமாக எழுவதும் முன்பு இஸ்ரேலுக்கு நல்லதாகபடவில்லை, ராஜிவ் காலம் வரை அப்படித்தான் இருந்தது
இன்றோ காட்சிகள் மாறிவிட்டன, மோடி சமீபத்தில்தான் கட்டிபிடி வைத்தியம் எல்லாம் செய்துவிட்டு வந்தார்
இவர்களோ இங்கு பாபர் மசூதியினை இடித்தவர்கள், இவர்களிடமிருந்து அல் அக்சா மசூதிக்கு எப்படி ஆதரவு குரல் எழும்பும?
தன் ராஜதந்திரத்தில் இந்தியாவினை வசமாக இவ்விவகாரத்தில் சிக்க வைத்துவிட்டது இஸ்ரேல்
இதோ உலக இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ள மற்ற நாடுகள் எல்லாம் இஸ்ரேலை இப்பொழுது கண்டிக்கும்பொழுது இந்தியா சத்தமே இல்லை
பெரும் கண்டன குரல்கள் இஸ்ரேல் மீது எழுகின்றன, இது போராக கூட எழலாம், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்கள் இனி இஸ்ரேலை தாக்கலாம்
இஸ்ரேல் யுத்தத்திற்கு தயார் இல்லாமலா இக்காரியத்தில் இறங்கியிருக்கும்?? அவர்களும் தயார்.
மசூதி திறக்கபடாவிட்டால் அது பெரும் போரின் தொடக்கமாக இருக்கும் என்பது மட்டும் உண்மை, அதன் அழிவும் கடுமையாக இருக்கும்
யாருக்கும் ஆபத்தின்றி மசூதி திறக்கபடவேண்டும் என்பதுதான் எல்லோரின் படபடப்பும், பிரார்த்தனையும்