கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்!

download.jpgகர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்!

அன்றே சொன்னதுதான், சித்தராமையா நாடகம் ஆடுகின்றார், சசிகலா தரப்பிற்கு காங்கிரஸின் ஆதரவின்றி இது சாத்தியமில்லை

நீதிபதி குன்ஹா தலமையில் விசாரணை நடக்காமல் உண்மை வெளிவராது

உண்மை வருகின்றதோ இல்லையோ, இப்பொழுது வந்திருக்கவேண்டிய காவேரி வரவில்லை. அணை கதவுகளை இறுக்கிவிட்டது கர்நாடகா.

சிறையில் சசிகலாவிற்கு வசதிகள் பெருக பெருக, காவேரியினை திற எனும் எடப்பாடி அரசுக்கு வாய்பூட்டு போட்டாயிற்று,

எங்கோ எழுதபடாத ஒப்பந்தம் துண்டைபோட்டு விரலை பிடித்து நடந்திருக்கலாம், சசிகலாவிற்கு வசதி, காவேரிக்கு சகதி என அது முடிவாயிருக்கலாம்

கன்னட அரசை கேள்வி கேட்கவேண்டிய அமைச்சர்கள், இங்கே கமலஹாசனை கேள்விகேட்டு கொண்டிருக்கின்றார்கள்

ஆடிபெருக்கு எல்லாம் இனி வறண்ட காவேரியில்தான்

நான் கேட்டவுடன் தண்ணீர் விட்ட கர்நாடாகாவிற்கு நன்றி என சொல்லிகொண்டிருந்த விஷாலை காணவில்லை, அவரை அலேக்காக தூக்கி அப்படியே கிருஷ்ணராஜ சாகரில் எறியவேண்டும்