சமீபத்தில் இரு விஷயங்களில் இந்தியா சாதித்திருக்கின்றது
சமீபத்தில் இரு விஷயங்களில் இந்தியா சாதித்திருக்கின்றது
மிகபெரும் லஷ்கர் தீவிரவாதி ஒருவன், நாட்டின் பல நாசவேலைகளுக்கு காரணமான அவன் சலீம் கான். துபாய்க்கு தப்பிய அவன் அங்கு சாதரண தொழிலாளியாக வேலை செய்திருக்கின்றான்
மறுபடியும் ஏதோ திட்டத்துடன் மும்பை வந்த அவனை ஈரசாக்கு போட்டு தூக்கிவிட்டது மும்பை போலீஸ்
அதாவது அவன் துபாயின் என்ன செய்கின்றான்? எந்த போலிபாஸ்போர்ட்டில் வருகின்றான் என சகலத்தையும் இந்திய உளவுதுறை திரட்டியிருக்கின்றது, பின் அவன் மும்பை வரும் தகவலை சொல்லிவிட்டது, அமுக்கிவிட்டார்கள்
இந்திய உளவுதுறை இப்படி சில விஷயங்களில் அசத்தும், வாழ்த்துக்கள்
இன்னொரு விஷயம் இந்த ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சம்பந்தபட்ட இத்தாலி கம்பெனியின் நிர்வாக அதிகாரி துபாயில் தூக்கபட்டிருக்கின்றார்,
என்னதான் நல்ல விஷயங்கள் இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியில் இரு கருப்பு புள்ளிகள் உண்டு, ஒன்று போபால் ஆண்டர்சனை தப்ப விட்டது, இன்னொன்று போபர்ஸ் குவாத்ரோச்சியினை பிடிக்காமல் விட்டது
இரு சர்சையான “போ”பால், “போ”பர்ஸ் விவகாரங்களின் முதலைகளை “போ” என அனுப்பியது இந்தியா
அட குவாத்ரோச்சி மலேசியால் இருந்தார், இந்தியா கேட்டுகொண்டே இருந்தது அவர்கள் கொடுக்கவில்லை. இதுவே இஸ்ரேலாக இருந்தால் ஈச்மென் பாணியில் தூக்கியிருப்பார்கள்
இந்தியா ஏன் செய்யவில்லை என்றால் தெரியவில்லை, ஆனால் ராஜிவ் அவரை கொண்டுவருவதில் தீவிரமாக இருந்தபொழுது கொல்லபட்டார், அதன் பின் குவாத்ரோச்சிக்கு சிக்கல் இல்லை
இந்த வழக்கு அப்படி அல்லாமல் ஓரளவு வேகமாக குற்றவாளிகள் தூக்கபடுவது நல்ல விஷயம்
அது என்ன போபர்ஸ் என்றாலும் இத்தாலி, ஹெலிகாப்டர் என்றாலும் இத்தாலி? உலகில் வேறு நாடுகளே இல்லையா?
இருக்கட்டும்
எப்படியோ துபாயில் இந்தியா பல விவகாரங்களில் சாதிப்பது நல்ல விஷயம், இந்திய வெளியுறவு மற்றும் உளவுதுறை பல விஷயங்களில் அமைதியாக சாதிக்கின்றது வாழ்த்துக்கள்
அப்படியானால் விஜய் மல்லையா லலித் மோடி எல்லாம் இப்படி கொத்தபடுவார்களா
என்றால் பதில் இல்லை 🙂
ஆனால் தூக்கவேண்டும் என முடிவெடுத்தால் தூக்கிவிடலாம், ஆனால் முடிவு எடுக்க வேண்டும் அல்லவா? அதுதான் சிக்கல்.