பேசாமல் பேசவைக்கின்றார் கலைஞர்..

இதனை எங்கள் அண்ணன் திருட்டு முருகன் சொன்னார், அங்கிள் சைமன் சொன்னார் , அவர்கள் சொன்னபடி ரேஷன் கடையினை மத்திய அரசு மூடுகின்றது என்றெல்லாம் சில குஞ்சுகள் கீச்சிடுகின்றன‌

அதாவது திருமுருகனும், சீமானும் மக்கள் போராளிகளாம், பெரும் அறிவாளிகளாம், ஏன் என்றால் கத்திவிட்டார்களாம்.

ஏண்டா டேய், இவர்களை எல்லாம் பெரிய … என‌ சொல்வீர்கள் என்றால், 1969லே மத்திய அரசின் மானியத்தை நம்ப முடியாது, ரேஷன் கடைகளை நடத்த மதுகடைகள் உட்பட சில முன்னேற்பாடு அவசியம் என சிந்தித்தது திமுகவினை என்ன சொல்வீர்கள்?

ஒப்புகொள்கின்றீர்களா? திமுக முன்யோசனையோடு தமிழகத்தை காத்திருக்கின்றது என வாய்விட்டு ஒப்புகொள்ள முடியுமா?

மதுகடையும் இன்னும் பல திட்டங்களின் நிதியினையும் கொண்டுதான் கலைஞர் அதனை அமைத்தார், எம்ஜிஆர், ஜெயா, ஜாணகி, பன்னீர், எடப்பாடி என எல்லோரும் அதனைத்தான் பின்பற்றிவருகின்றார்கள்.

குடி என்பது சட்டம் போட்டு தடுப்பது அல்ல, கலைஞர் மதுகடைகளை திறந்தார் என்பவர்கள், கள்ளசாராய சாவுகளை எல்லாம் மறப்பார்கள்

அன்றைய பஞ்சம் அப்படி, ஆனால் மாநில அரசினை மத்திய அரசு இப்படி மானியம் கொடுக்காமல் பழிவாங்கிற்று, அதில்தான் மதுகடைகளை திறந்து தமிழக ரேஷன் கடைகளின் இயக்கம் கெடாமல் பார்த்துகொண்டார் கலைஞர்.

அவர் போட்ட அச்சாரத்தில்தான் இன்று தமிழக ரேஷன் கடைகள் பாதுகாக்கபட்டிருக்கின்றது

நாளை திமுக அரசு அமைந்தாலும், டாஸ்மாக் இல்லாமல் ரேஷன் கடைகளை நடத்தும் திட்டம் அதனிடம் உண்டு

இப்படி எல்லாம் முன்னமே சிந்தித்து திட்டம் வகுப்பது திமுக, முன்னமே கத்துவது உங்கள் பாணி, , கழுதைக்கும் கத்த தெரியும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

கலைஞர் எப்படி எல்லாம் பிற்காலத்தை கணித்து செயல்பட்டிருக்கின்றார் என்பதை இந்த பாஜக ஆட்சியில் ஒவ்வொன்றாக கண்டுகொள்வீர்கள்

இது வெறும் டிரைலர்தான், முக்கிய காட்சிகள் பின்னால் வரும், அன்று அம்மனிதனை கட்டாயம் நினைப்பீர்கள்..

அவன் நடத்திய ராஜதந்திர அரசியல் அப்படி, ஒவ்வொரு காட்சியிலும் அம்மனிதனை தமிழகத்தை நினைக்க வைக்கும் பிஜேபிக்கு நன்றி, நன்றி என சொல்லி கொண்டிருக்கின்றான் திமுக தொண்டன்

பேசாமல் பேசவைக்கின்றார் கலைஞர்..

டேய் புலிகோஷ்டிகளா, இருந்து பாருங்கள், என்ன கேள்வியினை நீங்கள் எழுப்பினாலும் கலைஞர் எனும் மனிதனிடம் தோற்றுத்தான் போவீர்கள், அவரின் சிந்தனையும், செயலும் , முன்யோசனையும் அப்படி