பலியாகும் குழந்தைகள்…
கும்பகோணம் பள்ளி எரிந்து குழந்தைகள் பலியான வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை
ஆம் உண்மை குற்றவாளிகள் இரண்டு பேர். அவர்களை தண்டிக்க முடியாமல் நீதிமன்றம் கையினை பிசைகின்றது.
ஒன்று பாழாய்போன தேசத்தில் பிறந்த அந்த குழந்தைகள். அடுத்து அந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிய அந்த பெற்றோர்.
இதில் குழந்தைகள் இல்லை அதனால் அந்த பெற்றோரை பிடித்து நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் பெருந்தன்மையாக விட்டுவிட்டது
எப்படி இப்படி குற்றவாளிகள் தப்பிக்கலாம்?
நீதிதுறையினை நிச்சயம் மறுசீரமைப்பு செய்து அந்த பெற்றோரை தண்டித்தே தீரவேண்டும்.
இப்படிதான் சொல்ல வேண்டி இருக்கின்றது, அவ்வளவு பெரும் அநியாயம் இது.
பெரும் தவறான முன்னுதாரணத்தை அந்த நீதிமன்றம் செய்திருக்கின்றது. நீதிதுறையின் மிக பெரும் கருப்பு பக்கங்களில் அதன் கருப்பு தினங்களில் இதுவும் ஒன்று
நீங்காத கறை இது, நீதிமன்ற மேலான நம்பிக்கை தகர்ந்துவிட்ட நேரமிது. இந்நாட்டிற்கு இது நல்லதே அல்ல.
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு: கோரக்பூரில் 25 குழந்தைகள் உயிரிழப்பு
மருத்துவதுறையில் வட இந்தியா எவ்வளவு பின்னே உள்ளது என்பதை இதனை போல பல சம்பவங்களில் உணரலாம்
தென்னிந்தியாவின் வளர்ச்சி அங்கில்லை , வடக்கு வாழ்கின்றது என்பதெல்லாம் வெற்று கூச்சல் வீண் அரசியல்
முதலில் இந்நாடு உணவிலும், மருத்துவத்திலும், கல்வியிலும் தன்னிறைவு அடையட்டும். மதம், பசுமாடு, யோகா, சமஸ்கிருதம் இன்னபிற விஷயங்களை எல்லாம் பின்னர் பார்த்துகொள்ளலாம்.