கலைஞரை பற்றி தெரியாதா?

Image may contain: 2 people, glassesகொஞ்சம் பேர் கிளம்பிருக்கின்றான், கலைஞரை பற்றி தெரியாதா? அவர் ராஜாஜியினை எதிர்த்தார் பின் இணைந்தார், இந்திராவினை எதிர்த்தார் பின் வரவேற்றார், பிராமணரை எதிர்த்தார் பின் வாஜ்பாயோடு சேர்ந்தார், மானமே இல்லாதவர் அவரெல்லாம் சீ..சே என சொல்லிகொண்டே இருக்கின்றான்

சரி கலைஞருக்கு மானமில்லை. காமராஜரை எதிர்க்க கலைஞரோடு சேர்ந்த ராஜாஜிக்கு மானமில்லையா? தான் உருவாக்கிய எம்ஜிராமசந்திரன் தன்னை மீறி சென்ற பொழுது கலைஞர் பக்கம் வந்த இந்திராவிற்கு மானமில்லையா?

Image may contain: 2 people, people standing“அடேய் நீ பிராமணனை எப்படி எல்லாம் பேசினாய், உன்னிடம் வரமாட்டேன், உன்னை ஒழிப்பேன்..” என ராஜாஜி சொன்னாரா? “காங்கிரசினை தமிழகத்தில் வீழ்த்திய கிராதகா உன்னோடு என்ன உறவு?..” என்றாரா இந்திரா?

இல்லை மாறாக அவர்களும் உதயசூரியனுக்கு வோட்டு கேட்டார்கள், மறுக்க முடியுமா?

தமிழகத்தில் ஜெயா வேண்டவே வேண்டாம் பட்டபாடு போதும், நம்பகதன்மை மிக்கவர் என நம்பிய வாஜ்பாய்க்கும் மானமில்லைய்யா?

பார்ப்பன கட்சி பிதமகனான அத்வாணியும், வாஜ்பாயியும் உதயசூரியனுக்கு வோட்டு கேட்டு தமிழகம் முழுக்க பேசவில்லையா? அவர்களுக்கும் மானம் இல்லையா?

இது அரசியல் அப்படித்தான் சில விஷயம் இருக்கும், கலைஞர் செய்தால் மானம்கெட்டதனம். ராஜாஜி இந்திரா வாஜ்பாய் செய்தால் அதன் பெயர் அரசியல் தந்திரமா?

அதே வாஜ்பாயுடன் தான் டெசோ மாநாட்டில் கலைஞர் இருந்தார், அதே இந்திராவிடம் தான் ஈழம் பற்றி வலியுறுத்தினார். அதே டெல்லியிடம் தான் மல்லுகட்டினார். உரிமைகளை பெற்றார்.

Image may contain: 4 people, people smiling, people standingஅணைக்க வேண்டிய இடத்தில் டெல்லியினை அணைத்தார், சீறவேண்டிய இடத்தில் சீறினார்.

மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் அதுதான், கலைஞர் அதனைத்தான் செய்தார். இன்னொருவன் வந்தாலும் பிரிவினை பேசாமல் அதனைத்தான் செய்ய முடியும்

இதோ முன்னாள் முதல்வர் பன்னீரும், இந்நாள் எடப்ப்பாடியும் ஆளுக்கொரு காலை பிடிப்பது போலா பிடித்துகொண்டிருந்தார்?

இதனை எல்லாம் புரிந்து கொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும். அதுசரி அது இருந்தால் ஏன் இவனெல்லாம் அவரை திட்டபோகின்றான்?

பாவம் அது இல்லாத குறை.