அந்த தியாக குழந்தைகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

Image may contain: 1 person, outdoorஏராளமான குழந்தைகள் அந்த போபால் பயங்கர விஷவாவு கசிவில் கொல்லபட்டன. எண்ணிக்கை இன்றுவரை தெரியவில்லை. அக்குழந்தைக்கு என்ன நீதி கிடைத்தது?

ஏதோ இன்றுதான் கோரக்பூரில் குழந்தைகள் செத்தது போலவும், அதற்கு முன்பு இந்நாடு குழந்தைகளுக்கு மிக பாதுகாப்பான நாடு போலவும் பலர் சொல்லிகொண்டிருக்கின்றான்.

கும்பகோணத்தில் கருகிய குழந்தைகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை, கிடைக்கவும் கிடைக்காது. அதனை எல்லாம் மறந்துவிட்டுத்தான் உ.பி பாஜக அரசே… என பலர் வரிந்து கட்டுகின்றான்

குழந்தைகளுக்கு அரசியல் தெரியாது. எல்லா கட்சி ஆட்சியிலும் குழந்தைகள் கொல்லபட்டுகொண்டே இருக்கின்றன, காரணம் அரசியல் வெறிக்கு குழந்தை, பெரியவர் எனும் பாகுபாடு தெரியாது.

கட்சி அபத்தங்களை மீறி இனி ஒரு குழந்தையினை சாகவிடமாட்டோம் என இத்தேசம் முடிவெடுக்கவேண்டிய நேரமிது

பாழாய்போன தேசத்தில் உயிரை கொடுத்துத்தான் பல எச்சரிக்கைகளை செய்யவேண்டியிருக்கின்றது. போபால், கும்பகோண, கோரக்பூர் குழந்தைகள் எல்லாம் செய்திருக்கின்றன‌

அந்த தியாக குழந்தைகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.