தினகரன் ஆவேசம், பரபரப்பு பேச்சு
பன்னீர் செல்வம், முதல்வர் பழனிச்சாமி மீது தினகரன் ஆவேசம், பரபரப்பு பேச்சு.
குட்டியினை பிரிந்த தாய் யானை போல ஒரு மாதிரியாகிவிட்டார் தினகரன். என்னவெல்லாமோ அரற்றுகின்றார்,
முதல் மரியாதை படத்தில் ஒரு காட்சி உண்டு. பேரன் தன்னிடம் வருவதை மகள் தடுக்கும்பொழுது சிவாஜி உருக்கமாக சொல்வார்.
“என்னமோ ஒரு புள்ளைய பெத்துட்டாளாம் ஆட்டம் போடுறா..
எல்லாம் இப்போதான் கொஞ்ச நாளாத்தான்…
அதுக்கு முன்னாடி நாந்தான்.. இங்கதான் (நெஞ்சினை தட்டிகொள்வார்), இந்த நெஞ்சிலதான் போட்டு வளத்தேன்….”
சிவாஜியின் அந்த காட்சியினை கண்ட தியேட்டர் கூட்டம் அழும்.
அதனையே தினகரனும் சொல்லலாம்
“என்னமோ டெல்லில மோடி கால் கிடைச்சுட்டாம், அதனால ஆடுறாங்களாம்..
எல்லாம் இப்போதான் கொஞ்சநாளாத்தான்…
அதுக்கு முன்னாடி இங்கதான்.. இந்த காலிலேதான் விழுந்து கிடந்தானுக
நான் இந்த காலிலேதான் போட்டு வளத்தேன்.. அதெல்லாம் மறந்துட்டானுக அப்பு..” என சொல்லி இரண்டு சொட்டு கண்ணீர் விட்டால் கூட்டமே கதறாதா?
தினகரன் இன்னும் கொஞ்சம் பெர்மாமன்ஸ் செய்ய வேண்டியிருக்கின்றது.