கலைஞர் இல்லா அரசியல் ஒரு சுவாரஸ்யமில்லை
பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பன்னீர் செல்வம்: ஓரிரு நாளில் இணைகிறது அ.தி.மு.க. அணிகள்
கோரக்பூரில் குழந்தை இனம் செத்துகிடக்கின்றது, எல்லையில் சீனா கொந்தளிக்கின்றது. இன்னும் ஏகபட்ட சிக்கல்கள்.
தமிழகம் வறட்சியால் செத்துகொண்டிருக்கின்றது. 500 அடிக்கு கீழும் நீர் இல்லை.
ஆனால் பிரதமர் இந்த அதிமுகவிற்கு நாட்டாமை செய்துகொண்டிருக்கின்றார், பிரதமர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.
கலைஞர் இல்லா அரசியல் ஒரு சுவாரஸ்யமில்லை, இதே தினகரனின் 420 விவகாரம், கலைஞர் காலத்தில் வந்திருந்தால், அவரிடம் அதுபற்றி கேள்வி எழுப்பபட்டிருந்தால் பதில் இப்படி வந்திருக்கும்
“மோசடி வழக்கில் சிறைக்கு சென்றவரிடம், இன்னும் பல வழக்கில் சிக்கி அலைந்து கொண்டிருப்பவரிடம், அதுவும் சிறையில் இருக்கும் இன்னொருவரை அடிக்கடி சந்தித்துவிட்டு வந்து கட்சி நடத்துபவரிடமிருந்து இப்படியான 420 போன்ற வார்த்தைகள் வருவதில் என்ன ஆச்சரியம்?
அப்படிபட்ட விமர்சனங்கள் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
இந்த மாநில முதல்வர் 420யா இல்லையா என்பது பற்றி நான் சொல்ல விரும்பவில்லை, ஆனால் இம்மாநிலத்திற்கு அவசர தேவை 356ம் சட்டபிரிவு என்பதை மட்டும் சொல்லிகொள்ள விரும்புகின்றேன்”
சசிகலா தொண்டர்களுக்கு உருக்கமான கடிதம் : செய்தி
என்னவோ சுதந்திர போராட்ட காலத்தில் நேருவும், காந்தியும் எழுதிய கடிதம் போலவும். பல சமூக போராட்டங்களில் கைதான பெரியார் சிறையில் இருந்து எழுதிய கடிதம் போலவும் அம்மையார் எழுதிகொண்டிருக்கின்றார்.
ஊழல் வழக்கில் சிறைசென்றுவிட்டு ஏதோ நெல்சன் மண்டேலா அளவிற்கு பில்டப் செய்து கொண்டிருக்கின்றார் அம்மணி.