தமிழிசைக்கு கொலை மிரட்டல் : செய்தி
தமிழிசைக்கு கொலை மிரட்டல் : செய்தி
தமிழிசைக்கா மிரட்டல்? தமிழிசையின் காமெடியினை ரசிக்க முடியாத அளவிற்கா தமிழகத்தில் நகைச்சுவை உணர்வு கெட்டு போயிற்று.
இவரின் காமெடியினை கூட ரசிக்க முடியாமல் கொலை மிரட்டல் விடுவித்தவர்கள் நிச்சயம் மனநிலை பாதிக்கபட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும்.
எனினும் அந்த மனநிலை பாதிக்கபட்ட சைக்கோக்களிடம் இருந்து தமிழிசையினை காக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
செப்டம்பர் 7-ம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது
ஜெயலலிதா மீது ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், இவர்களின் அட்டகாசத்தை ஒடுக்கி, ஒரே இரவில் வீட்டுக்கு அனுப்பி, அவர்களை ஆட்டி வைத்த விதத்தை மறக்க முடியாது.
அவர் இருக்கும் வரை அடங்கி கிடந்தவர்கள் மறுபடி இப்பொழுது கிளம்பிவிட்டார்கள்.
இந்த புளூவேல் எனப்படும் கொடூர விளையாட்டு உலகம் முழுக்க அச்சுறுத்தல் என்றாலும், தமிழகத்தில் அதன் தீவிரம் அதிகமாகவே உள்ளது.
புளுவேல் எனும் கொடூர விளையாட்டிற்கே ஆதரவாக சிலர் இறங்கும் தமிழகத்தில், அங்கிள் சைமனுக்க்கு ஆதரவாக கைதட்ட சிலர் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்??
பின் ஏன் அந்த தீபாவின் கணவன் மாதவனுக்கு எல்லாம் கட்சி தொடங்கும் ஆசைவராது.
எப்படியோ இன்னும் மோடி ஆட்சியில்தான் திட்டமிட்டு தமிழகத்தில் புளுவேல் அனுமதிக்கபட்டது, இது இலுமினாட்டி சதி , திராவிட ஒழிப்பு இந்துத்வா சதி என்னும் குரல் வாரதாது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது.