அனிதா சட்டம் என ஒன்றை இயற்றவேண்டுமாம்

தமிழக அரசில் நீட் போராட்டங்கள் நடக்க விடாமல் தடுக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மிக அழகாக , ஆழ திட்டமிட்டு காய் நகர்த்துகின்றார்கள்.

நிச்சயம் இது கவிழவேண்டிய அரசு, அதிமுகவினர் கூட அந்த முடிவிற்கு வந்தாயிற்று, ஆனால் வலுகட்டாயமாக பிடித்து ஆளவைத்துகொண்டிருப்பது டெல்லி

இப்பொழுது நீட் போராட்டத்தை நசுக்கும் உத்தரவினை சுப்ரீம் கோர்ட்டை சொல்ல சொல்லி பின் நிற்கின்றார்கள்.

(காவிரி நீர் கொடுக்கங்கள் என்றுதான் கன்னடத்திற்கு பலமுறை உத்தரவிட்டது சுப்ரீம்கோர்ட், கன்னடம் பணியவில்லைதான், பல முறை நடந்த விஷயம் இது

ஆனால் என்ன செய்தார்கள்? ஒன்றுமில்லை)

இப்பொழுதோ தமிழகத்தில் வலுகட்டாயமாக சில விஷயங்கள் திணிக்கபடவேண்டும், ஒரு குரலும் எழும்பாமல் செய்யபடவேண்டும், மக்களுக்கு தமிழக கட்சிகள் மேல் அபிமானம் இல்லாமல் போகவேண்டும் என திட்டமிட்டு காரியத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.

ஒரு அடிமை அரசை நீடிக்க வைத்து, அதற்கு சில முகமூடிகளை போட்டு உத்தரவும் இட்டுகொண்டிருக்கின்றார்கள்.

பலர் நீதிமன்ற உத்தரவினை மீறுவது தவறு என முகமூடி போட்டு இறங்கியாயிற்று

ஆனால் பாபர் மசூதி முதல் காவிரிவரை யார் உச்சநீதிமன்றத்தை அலட்சியம் செய்தார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல.

எத்தனை முறை உச்சநீதிமன்ற அறிவிப்புகளை அவர்கள் காலில் போட்டு மிதித்தார்கள் என்பதெல்லாம் வரலாறு நெடுக்க காண கிடக்கின்றது.

ஆனால் இப்பொழுது தமிழகம் கண்டிப்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்தே ஆகவேண்டுமாம், கட்டுபட்டே தீரவேண்டுமாம்

காவேரியில் கன்ன்ட அரசிடம் யாராவது இதனை சொன்னார்களா? இப்படி ஏராளம் உணடு

தமிழகம் மீது பெரும் அடக்குமுறை ஏவபடுகின்றது. ஆனால் இதுபோன்று ஆயிரம் அடக்குமுறைகளை கண்ட தமிழகம் இது, அதில் வென்றும் காட்டிற்று.

இம்முறை எப்படி செயலாற்றபோகின்றது என மொத்த இந்தியாவும் எதிர்பார்த்துகொண்டே இருக்கின்றது.

இத்தேசத்தில் வெள்ளையன் கூட அவன் ஆட்சியில் அவன் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருந்தான்.

சுதந்திர இந்தியாவில் அது கூட இல்லை என்பதுதான் சோகம்


அனிதா சட்டம் என ஒன்றை இயற்றவேண்டுமாம்

முன்பொருகாலத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயகுமார் என்றொரு மாணவன் கொல்லபட்டபொழுது அவன் பெயரில் சட்டம் வந்ததா?

நாவரசு எனும் மாணவன் கொடூரமாக ராக்கிங்கில் கொல்லபட்டபோது அவன் பெயரில் சட்டம் வந்ததா?

சரிகா ஷா கொல்லபட்டபொழுது அவள் பெயரில் சட்டம் வந்ததா?

ஜாதிய படுகொலைகளை தடுக்க இம்மானுவேல் சேகரன் பெயரில் சட்டம் வந்ததா?

முதலில் அதனை எல்லாம் செய்துவிட்டு அனிதா சட்டம் பக்கம் வாருங்கள்