சம்பத் அண்ணாதுரையிடம் சொன்னது
இந்த சமூக நீதி, அரசியல் இன்னபிற விவகாரங்களை எல்லாம் மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது சினிமாக்காரர்கள்.
இப்பொழுது கல்வியினையும் சேர்த்து எடுத்துகொண்டார்கள், நீட் என ஒரே சத்தம்.
அன்று திமுக எனும் உணர்ச்சிமிக்க இயக்கம் இந்த சினிமா அல்ட்ராசிட்டிகளை கட்சியில் சேர்த்தபொழுது ஈவிகேஸ் சம்பத் அதனை கண்டித்தார்.
இந்த கூத்தாடிகள் அரசியல் பேசினால் அது தமிழ்நாட்டில் மாபெரும் அழிவினையும், குழப்பத்தையும் கோமாளிதனத்தையும் கொண்டுவரும் இவர்களை வளர்க்கவேண்டாம் என மன்றாடினார்.
இதனை கண்டித்து கட்சியினைவிட்டே வெளியேறினார், ஆனாலும் சினிமாக்காரர்களை வளர்த்துவிட்டார் அண்ணா, அதன் விளைவுதான் தமிழகம் காணும் அலங்கோலம்.
சம்பத் கணித்தது எவ்வளவு சரியான கணிப்பு என்பதை காலம் இப்பொழுது சொல்லிகொண்டிருக்கின்றது.
இப்பொழுது நீட் தேர்வுக்கும் அதே சினிமாக்காரர்கள் அழிச்சாட்டியம் தாளவில்லை, ஆளாளுக்கு ஒரு புலம்பல், சீறல் இவைகளை செய்தியாக்க சில ஊடகங்கள்
அப்படி மருத்துவத்தில் பெரும் படிப்பு முடித்து அமெரிக்காவில் புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருக்கும் அமீர் என்பவரும், லண்டன் இதய சிகிச்சை நிபுணரும் தற்செயலாக தமிழகம் வந்த ரஞ்சித் என்பவரும் கருத்தால் மோதினார்களாம்
அவர் தமிழரை ஏமாற்றுகின்றார்கள் என்றாராம், உடனே ரஞ்சித் தமிழர் பெயரை சொல்லி எப்படி ஏமாற்றலாம் என சீறினாரம்
தமிழர் பெயரை சொல்லி ஏமாற்றுவது சரியா? அல்லது சாதி பெயரை சொல்லி ஏமாற்றுவது சரியா? என இரு பிரபல டாக்டர்களும் நீட் தொடர்பாக மோதி கொண்டிருக்கின்றார்கள்.
அந்த சம்பத் அண்ணாதுரையிடம் சொன்னது எவ்வளவு சரியாக இருந்திருக்கின்றது?