காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம்
தமிழகத்தில் நடக்கும் காட்சிகளை கண்டால் ஒன்று மட்டும் கேட்கலாம்
காங்கிரசும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் , சரி மூன்றாம் அணியாவது அகில இந்திய அளவில் அமைப்பீர்களா என்றால் சத்தமே இருக்காது.
இரண்டிற்கும் மாற்றாக அகில இந்திய அளவில் உங்கள் கட்சியினை வளத்துவிட்டால் என்ன? என்றாலும் மூச்சே இருக்காது.
திராவிட உரிமை, இந்திய எதிர்ப்பு என்றெல்லாம் முஷ்டி தூக்குபவர்கள் தனிநாடு கேட்டால் என்ன என்றாலும் சத்தமிருக்காது.
அதாவது இந்தியாவோடு ஒட்டவும் மாட்டார்கள், தனிநாடு என கிளம்பவும் மாட்டார்கள்.
ஏதாவது ஒன்றை சொல்லி, அதனை அரசியலாக்கி டெல்லி சதி, ஆரிய சதி என சொல்லியே அரசியல் செய்யவேண்டியது.
பெரியார் மிக தைரியமாக திராவிட நாடே தீர்வு என்றார், இவர்களோ திராவிட் நாட்டு கோரிக்கையினை கைவிட்டுவிட்டுத்தான் அரசியலே தொடங்கினார்கள்.
ஆனால் குதித்துகொண்டே இருப்பார்கள்
இப்போது ஆளாளுக்கு தமிழகத்தில் திடீர் போராளிகள் உருவாவதை கண்டால் ஒன்று புரிகின்றது
எல்லோருக்கும் தலைவராக ஆசை, எல்லோருக்கும் தமிழ்தலைவர் என முடி சூட பகிரங்க ஆசை என்பது மட்டும் உண்மை
அந்த ஒரு கிரீடத்திற்குத்தான் இப்படி ஆளாளுக்கு பொங்குகின்றார்களே தவிர உண்மையான போராட்டம் இது அல்ல
ஒன்று இருக்கும் சில சிக்கல்களை சகித்துகொண்டு இந்தியாவோடு இருந்து விடுவது, அல்லது தனிநாடு கோருவது என்பதை தவிர வேறு தேர்வு இங்கு இருக்க முடியாது,
இரண்டையும் செய்யாமல் அழுகை அரசியல், ஆர்ப்பாட்ட அரசியல் எல்லாம் ஒரு முடிவினையும் கொடுக்காது.
இரண்டையும் செய்யமாட்டேன்,ஆனால் இருக்கும் பிரச்சினையில் எல்லாம் ஆட்டம்போட்டு மிக சரியாக மாநில முதல்வாராக குறிவைப்போம், மாநில அரசியலை நிர்ணயிக்க வியூகம் வகுப்போம் என்பதெல்லாம் சுத்த அயோக்கியதனம்
அந்த அயோக்கியதனம்தான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது.
நடிகர் சூர்யாவிற்கு நீட் தேர்வு குறித்து என்ன தெரியும்? தமிழிசை சீற்றம்
ஏம்மா, டாக்டருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என யாராவது கேட்டால் என்ன செய்வதாக உத்தேசம்?
பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஆக எடப்பாடி அரசு நீடிக்க, பாஜகவினை தமிழகத்தில் வளர்த்துவிட வேண்டும் என்ற பேரம் நடந்தது வெளிவந்தாயிற்று.
சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள்: சென்னையில் பரபரப்பு
அறியாத வயது மாணவர்களை தூண்டி விடும் இச்செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.
அரசியலுக்காக பள்ளிமாணவர்களை தூண்டிவிடும் இந்த அயோக்கியர்களிடமிருந்து அவர்களை காப்பாற்றவேண்டும், பெற்றோர் மகா விழிப்பாக இருக்கவேண்டிய தருணமிது.
அந்த பள்ளி எதுவென தெரியவில்லை, நல்ல அரசு என்றால் உடனடியாக அப்பள்ளியினை சில நாட்கள் மூட நவடிக்கை எடுக்கலாம், ஒன்றும் கெட்டுவிடாது.