கரூரில் ரெய்டு முடிவிற்கு வந்தது, ஏராளமான ஆதாரங்கள் சிக்கின‌

கரூரில் ரெய்டு முடிவிற்கு வந்தது, ஏராளமான ஆதாரங்கள் சிக்கின‌

கரூர் சித்தரைவிட பெரும் சித்துவிளையாட்டுக்கள் ஆடுபவர்கள் எல்லாம் கரூரில் இருப்பார்கள் போல.

நாசிக் நகரில் அடித்த நோட்டுக்களின் பெரும் பகுதி அங்கேதான் பதுக்கபட்டிருகின்றது, அந்த‌ ரிசர்வ் வங்கி தன் கிளையினை அங்கே திறந்துவிட்டால் இந்த சித்தர்களுக்கு இன்னும் வசதியாக இருக்கும்.

ஆனால் அதிமுகவினரிடம் கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா?

“நியூயார்க், துபாய், மும்பை, ஹாங்காங், ஷாங்காய், டோக்யா, சிஙகப்பூர் வரிசையில் இந்த தமிழகத்து கரூரும் அதிக பணம் புழங்கும் இடமாக மாற்றியது நிச்சயம் அதிமுகவின் சாதனை,

அப்படி அம்மா கனவினை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம், அதனை கண்டு பொறாமைபட்ட மத்திய அரசும், திமுகவும் எங்களுக்கு எதிராக செய்யும் சதி இது”


யோகா தமிழரின் கலை, அதனை தமிழர்கள் தயக்கமின்றி ஏற்கவேண்டும் : சீமான்

அடுத்து அங்கிள் சொல்ல போவது என்ன? இதுதான்

“கடல்கொண்ட கபாடபுரத்தில் மன்னர்கள் பேசிகொண்ட ரகசிய பாஷைதான் சமஸ்கிருதம், தமிழன் ஆலயத்திலும் கடவுளோடு பேச அந்த சமஸ்கிருதம் பயன்பட்டது. பின் அதனை வட இந்தியர்கள் நம்மிடம் இருந்து கற்றனர்.

கடலில் குமரிகண்டம் மூழ்கியதால் நம்மிடம் சமஸ்கிருதம் இல்லாமல் போனது. அவர்கள் அப்படியே வைத்துகொண்டார்கள்

அதனால் தமிழர்களின் ரகசிய மொழியான சமஸ்கிருதத்தை தமிழர்கள் தயக்கமின்றி ஏற்க வேண்டும்”

ஆனாலும் வைகோ, திருமுருகனின் சிறைவாசம் அங்கிள் சைமனுக்கு மரணபயத்தை காட்டிவிட்டது மட்டும் உண்மை.


இலங்கை கிரிக்கெட் அணி மீது ஊழல் புகார், 40க்கும் மேற்பட்டவர்களிடம் அதிரடி விசாரணை

இந்திய அணி அவர்களை துவைத்து காயபோட்டபொழுதே சந்தேகம் வந்தது

அப்படியே இந்த ஆஸ்திரேலிய பயலுகளையும் விசாரிக்க வேண்டும்.