குர்திஸ்தானுக்கான தனிநாடு வாக்கெடுப்பு இன்று நடக்கின்றது

No automatic alt text available.குர்திஸ்தானுக்கான தனிநாடு வாக்கெடுப்பு இன்று நடக்கின்றது , ஈராக்கில் குர்துகள் வாழும் பகுதியில் இது நடக்கின்றது

நிச்சயம் குர்துக்கள் தனிநாட்டுக்கு வாக்களிப்பார்கள், ஆனால் உடனடியாக குர்திஸ்தான் உதித்திவிடுமா என்பதுதான் சிக்கல்.

எந்த நாடும் தன் நாடு உடைய அனுமதிக்காது. குர்துகள் தனிநாடு பிரகடனம் செய்தால் மறுநிமிடம் தாக்க ஈராக் ராணுவம் தயங்காது.

ஈரான் போன்ற நாடுகள் குர்திஸ்தானை அங்கீகரிக்கமாட்டோம் என சொல்லியாயிற்று, துருக்கி தன் ராணுவத்துடன் ஈராக் எல்லைக்கு வந்தாயிற்று?

என்ன சிக்கல்?

குர்துகள் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் என எல்லா நாட்டிலும் உண்டு. ஈராக்கில் அதிகம். ஈராக் உடைந்து தனி குர்து நாடு ஆகிவிட்டால் அது அடுத்து துருக்கி, சிரியா என எதிரொலிக்கும்.

இதில் இஸ்ரேல் வேறு குர்திஸ்தானுக்கு ஆதரவு என கிளம்பிவிட்டது, பாலஸ்தீனுக்கு சுதந்திரம் கொடுக்காமல் எங்கோ இருக்கும் குர்துகளுக்கு ஆதரவு என இஸ்ரேல் கிளம்புவது அரபு நாடுகளின் கோபத்தை அதிகரிக்கின்றன‌

அதனால் குர்திஸ்தான் உருவானாலும், அது நிம்மதியாக இருக்க வாய்ப்பில்லை.

நாடுகள் அமைவது அவ்வளவு சிக்கல், அதற்கு உலக காரணிகள் முதல் அக்கம் பக்க நாடுகள் நிலைவரை மகா அவசியம்.

துப்பாகி தூக்கியனுக்கு எல்லாம் நாடு கிடைக்குமென்றால் இவ்வுலகில் கிட்டதட்ட 50 ஆயிரம் நாடுகள் இருந்திருக்க வேண்டும்

ஈழத்தில் துப்பாக்கி தூக்கிவிட்டார்கள்,அதனால் நாடு கொடுத்தாக வேண்டும் என்பதெல்லாம் அபத்தம்.

நாங்கள் எங்களுக்கு நாடு கிடைக்கும் வரை யாரையாவது கொன்று கொண்டே இருப்போம் என்பதெல்லாம், எல்லோரும் சேர்ந்து எங்களை கொல்ல வாருங்கள் எனும் அழைப்பேயன்றி வேறல்ல.

அந்த முட்டாள்தனத்தை புலிகள் செய்தனர், அவர்களுக்கு பல முட்டாள்கள் இங்கிருந்து இன்னும் வால் பிடித்துகொண்டே இருக்கின்றனர்.

இவர்களை எல்லாம் ஈராக்கின் எல்லையில் கொண்டு விடவேண்டும்.