“ஆரவ்வை ஏன் காதலிக்கணும்?” : ஓவியா

 “நான் லவ் பண்ண நிறைய‌ பேர் இருக்கும்போது, ஆரவ்வை ஏன் காதலிக்கணும்?” : ஓவியா

மிஸ்டர் Omm Prakash புரியுதா? ஒரு பெண் இவ்வளவுதான் சொல்லமுடியும்.

என்னதான் நடிகை என்றாலும், அவளுக்கும் அச்சம், நாணம், மடம்..அப்புறம் ஆங் பயிர்ப்ப்பு எல்லாம் இருக்கத்தானே செய்யும்

உமக்கு இன்னும் வாய்ப்பிருக்கின்றது.

 

மா.நடராஜன் கவலைக்கிடம் : மருத்துவமனை தகவல்

என்னடா அதிமுகவிற்கு வந்த சோதனை?

ஜெயா இல்லை, சோ ராமசாமி இல்லை, சசிகலா உள்ளே. இப்பொழுது நடராஜனும் ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டாராம்.

இனி என்ன? அதிமுக எனும் செவ்வாழை தோட்டத்தில் குதித்தாடபோகும் மந்தி கூட்டம் யாரென சொல்லியா தெரியவேண்டும்?

இந்த நடராஜனுக்கு கொடுக்கபடும் கிசிச்சையிலாவது உண்மை நிலவரம் வெளிவந்தால் நல்லது.

மருத்துவமனையில் இருக்கும் நடராஜன் படமும் வெளிவரவில்லையே ஏன்?

ஒருவேளை சசிகலா அருகில் இருப்பாரோ என்னமோ?


நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் திட்டமான “சவுபாக்கியா யோஜனா” என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

ஆக நாட்டில் எல்லோருக்கும் மின்சார வசதி இல்லை என்பதை இவர்கள் கண்டறிய , ஆட்சிக்கு வந்து கிட்டதட்ட 4 ஆண்டுகள் தேவை பட்டிருக்கின்றது.

இந்தியாவின் மொத்த பிரச்சினைகளை கண்டுகொள்ளவே இவர்களுக்குஇன்னும் 200 ஆண்டுகாலம் தேவைபடும் போல..