ஸ்டாலின் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுகின்றார்
வைகோ மீதான தாக்குதல் முயற்சி கவலையளிக்கிறது: ஸ்டாலின்
அதாகபட்டது ஐ.நா மனித உரிமை அவையில் போர்குற்றம் என சிங்களர்களை வைகோ சாட, “ஏண்டா டேய்.. உன்னையெல்லாம் கள்ளதோணி ஏறிவந்த அன்னைக்கே சுட்டுருக்கணும்” என சிங்களர்கள் சூழ்ந்து கத்தியிருக்கின்றார்கள்.
அது வைகோ மீதான தாக்குதல் முயற்சி என சொல்லபட்டாயிற்று, விரைவில் ஈழதமிருக்காக சிங்களனிடம் அடிவாங்கினார் வைகோ என்றளவில் செய்திகள் வரலாம்
இச்சம்பவம் தொடர்பாக ஸ்டாலினும் தன் வருத்தத்தை சொல்லிவிட்டார்
சிங்களன் சொன்னது கூட வலித்திருக்காது, ஆனால் ஸ்டாலின் சொன்னது வைகோவிற்கு நிச்சயம் வலித்திருக்கும், அரசியல் உள்குத்து இது.
வைகோ டெல்லி சென்றால் மதிப்பதில்லை, மலேசியா சென்றால் உள்ளேயே விடுவதில்லை, இப்பொழுது ஜெனிவாவில் பாய்ந்திருக்கின்றார்கள்.
ஸ்டாலின் வேறு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுகின்றார்