அவர் வீரம் Expiry ஆகிவிட்டது போல..
இந்த சீமான், திருமுருகன் , வேல் முருகன் போன்ற வீர தமிழர்கள் இருக்கும் தமிழகத்தில், வீரதமிழச்சிகள் இல்லாவிட்டால் எப்படி?
அப்படி அம்மையார் வீரலட்சுமி என்பவர் வந்தார், முதலில் டெய்லரிடம் சென்று கலர் கலராக ஜாக்கெட் தைத்தார், ஒருவித ஸ்டைலில் நின்றுகொண்டு நான் தமிழச்சி, இது தமிழ்நாடு என குரல் எழுப்பினார்.
“தமிழர் முன்னேற்றபடை” என்றொரு கட்சியும் தொடங்கினார், எத்தனை தமிழர்களை முன்னேற்றினார் என்பது தெரியாது.
பிரபாகரன் சிலையினை எடுத்தால் சோபன் பாபு சிலையினை தகர்ப்போம் என்றெல்லாம் கிளம்பினார், சோபன் பாபு சிலை இன்னும் அப்படியே இருக்கின்றது.
இன்னும் பல இடங்களில் கத்தினார், ஏதோ ஒரு டிவிபேட்டியில் சி.ஆர் சரஸ்வதி கூட எல்லாம் கும்மியடித்தார்.
குஷ்பூவினை கூட சில இடங்களில் வம்புக்கு இழுத்தார், ஆனால் குஷ்பூவிற்கு யாருக்கு பதில் சொல்லவேண்டும் என தெரியாதா? கண்டுகொள்ளவே இல்லை.
என்ன செய்தாலும் தன்னை கவனிக்கயாருமில்லை என்ற வருத்தம் வீரதமிழச்சிக்கு இருந்தது, அவர் கண்ணில் பட்டது காங்கிரஸ் சத்யமூர்த்திபவன்
உடனே தன் பரிவாரங்களோடு சென்று கல் எறிந்தார், அதாவது காங்கிரஸை தமிழகத்தை விட்டு விரட்டுகின்றாராம். அது விரட்டபட்டு எத்தனை வருடமாயிற்று என்பது கூட அவருக்கு தெரியவில்லை.
வழக்கம் போல ஏதோ காங்கிரஸ் கோஷ்டி தகறாறு போல என எண்ணிவிட்ட காவலர்களுக்கு விஷயம் பின்புதான் புரிந்தது, பிடித்து வழக்கு பதிந்துவிட்டார்கள்
அதன் பின் அம்மணி மகா அமைதி, அதுவும் மோடி வந்தபின் வைகோ சிறைவாசம், திருமுருகன் சிறை காட்சி எல்லாம் வந்தபின் அம்மணி மகா அமைதி
இப்பொழுது அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபொழுதும் அவரை காணவில்லை.
அவர்தான் வீரதமிழச்சியாயிற்றே ஒருவேளை பாஜகவின் கமலாயலம் மீது கல் எறிய போயிருபாரோ என பார்த்தால் அங்கும் காணவில்லை
அம்மணி ஒருவேளை படகேறி ஈழம் சென்றிருக்கலாம் என்கின்றது செய்திகள்.
எப்படியோ, காங்கிரஸ் காலத்தில் கோஷமிட்ட வீரலட்சுமியினை பாஜகவின் காலத்தில் காணவே முடியவில்லை.
அவர் வீரம் Expiry ஆகிவிட்டது போல..
ஒருமுறை எங்கோ போட்டியிட்டு தமிழகத்தை மீட்பேன் என வைகோவிடம் ஆசிவாங்கினார்
சனி அன்று பிடித்திருக்கலாம்.