ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தோம் – செல்லூர் ராஜு
அமைச்சர்கள் அனைவருமே ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தோம் – செல்லூர் ராஜு
உயிரோடு இருந்தை பார்த்தார்களா? இல்லை அவர் இறந்தபின் பார்த்தார்களா என்பது பற்றி அமைச்சர் சொல்லவே இல்லை.
ஒருவர் பார்க்கவேயில்லை என்கின்றார், ஒருவர் நாங்கள் பொய் சொன்னோம் என்கின்றார், இதோ ஒருவர் மொத்தமாக பார்த்தோம் என்கின்றார்.
ஒருவேளை பல ஜெயலலிதாக்கள் இருந்திருப்பார்களோ?
ஒரிஜினல் ஜெயலலிதாவினை விரட்டிவிட்டு டூப்ளிகேட் ஜெயலலிதாவினை மருத்துவமனையில் சேர்த்திருப்பார்களோ?
அந்த டூப்ளிகேட் ஜெயலலிதா கவர்ணருக்கு கையினை உயர்த்தி, இன்னும் பலருக்கு தலையினை உயர்த்தி பேசியிருப்பாரோ?
அப்படியானால் ஒரிஜினல் ஜெயலலிதா எங்கே?
தலை சுற்றலே வந்துவிடுகின்றது..
இனி ஜெயலலிதாவே வந்து என்ன நடந்தது என சொன்னால் தவிர இப்பிரச்சினையினை கவனிக்க கூடாது
ஆனானபட்ட நேரு, காமராஜர், இந்திரா போன்ற பெரும் ஜாம்பவான்களை எதிர்த்து வெற்றிகண்ட திமுக, இன்று பழனிச்சாமி, பன்னீரை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றது.
அதனையாவது ஒரு வகையில் வைக்கலாம், ஆனால் கமலஹாசனுக்கும் அஞ்ச வேண்டுமா?
எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டது?