காலத்திற்கு ஏற்றவாறு நாடு மாறுவது அவசியம்…

Image may contain: 1 person, smilingஒரு நாடு இயங்க மகா முக்கியமான விஷயம் போக்குவரத்து, அது எவ்வளவுக்கு எளிதாகின்றதோ அவ்வளவிற்கு நாடு முன்னேறும்

காலத்திற்கு ஏற்றவாறு நாடு மாறுவது அவசியம், அதுவும் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மாறியே தீரவேண்டும்.

அதில் ஒரு விஷயம்தான் புல்லட் ரயில்.

மிக மிக வேகமான ரயில் அது, இந்தியாவில் என்றோ வந்திருக்க வேண்டிய விஷயம், ஆனால் இப்பொழுதுதான் வந்திருக்கின்றது, இதுவே தாமதம். எப்படியோ மோடி அறிமுகபடுத்தியிருக்கும் உருப்படியான திட்டம் இது.

முதன் முறையாக மும்பை அகமதாபாத் இடையே அமைக்கின்றார்கள், அந்த 500 கிமி தூரத்தை அந்த ரயில் 1.5 மணி நேரத்தில் கடந்துவிடும்

இது நாடு முழுக்க வரும், வரவேண்டும். இவற்றால் பல அனுகூலங்கள் உண்டு

நேரம் மிச்சமாகும், இன்னொரு விஷயமும் கவனிக்கதக்கது, மதுரைக்கும் சென்னைக்கும் பிரயாண நேரம் 1.5 மணிநேரம் என்றால் சென்னையில் யார் தங்குவார்கள்?

ஆக நகரின் பெருக்கத்தையும், நெருக்கடியினையும் இது குறைக்கும், உதாரணத்திற்கு சென்னைக்கு வெகு தூரத்தில் விமான நிலையம் அமைக்கபட்டால் கூட , 30 நிமிடத்தில் சென்றுவிடுமாறு இம்மாதிரி ரயில் விட்டு இணைத்துவிடலாம்

வெளிநாடுகள் இம்மாதியான விஷயங்களை அன்றாடம் பயன்படுத்துகின்றன.

வெளிநாட்டு தொழில் வாய்ப்பும் இன்னபிற விஷயங்களும் பெருக வேண்டுமானால் புல்லட் டிரெய்ன் போன்ற நவீன வசதிகள் அவசியம் தேவை

ஏராளமான அனுகூலம் இதில் உண்டு. இது நாடு முழுக்க பரவ வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான், கழிப்பறை இல்லா தேசத்தில் இது அவசியமா என்பான், அவன் அப்படித்தான்.

சீனாவில் இன்னும் பல இடங்களில் வறுமை உண்டு, ரஷ்யாவின் பனிபாலையில் இன்னமும் குடிசை உண்டு. அமெரிக்காவிலும் வறுமையானோர் உண்டு.

அரசு ஒவ்வொரு வீடாக சென்று ஊட்ட முடியாது, வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தால், உழைத்து பிழைக்க வேண்டியது மக்களின் கடமை.

அப்படி மக்கள் எல்லா இடங்களுக்கும் எளிதில் சென்றுவர அரசு நல்ல முயற்சி எடுக்கின்றது, இதனை வரவேற்க வேண்டும்

மாறாக கழிப்பறை இல்லை, அதில் கழுவ கோப்பை இல்ல இதெல்லாம் தேவையா என்றால் அவனிடம் கேட்பது ஒன்றுதான்

வீடும் அரசு தரவேண்டும் , கழிவறையும் அரசு தரவேண்டும் , உணவும் ஊட்டிவிட வேண்டும் அப்படித்தானே?

அதாவது நாடு அவர்களுக்கு எல்லாம் செய்துகொண்டே இருக்கவேண்டும், நாட்டுக்கு ஒன்றும் செய்யாமல் உண்டுவிட்டு கழிப்பறையில் உரம் செய்வார்களாம்.

இந்த பதர்கள் எல்லாம் தள்ளபடவேண்டியவை, உலகிற்பேற்ப இந்தியாவும் மாறவேண்டும் இல்லாவிட்டால் மிக பின் தங்கிவிடுவோம்.

புல்லட் ரயிலை பொறுத்தவரை இதுவே மகா தாமதம். இன்னும் செய்யவேண்டிய வசதி ஏராளம் உண்டு. அதனை மோடி செய்யட்டும்.

ஒரே கவலை என்னவென்றால் புல்லட் ரயிலில் மக்கள்தான் பயணிக்கவேண்டும்.

பசு மாடுகளுக்கான ஸ்பெஷல் புல்லட் ரயில், ராமர் கோவில் கட்ட ஸ்பெஷல் ட்ரெய்ன் என சொல்லிவிட்டால் உலகம் வாய்விட்டு சிரிக்கும், நிலமை சிக்கலாகும்.