கானா பாடலை சாடிய சீமான்

Image may contain: one or more peopleகானா பாடலை சாடிய சீமான் மீது, சென்னைவாசிகள் கடும் கோபம், பலத்த கண்டனம் : செய்தி

அதாகபட்டது சினிமா கானா பாடல்கள் தமிழை கெடுக்கின்றன, நரிகுறவ பாஷை போலாக்கிவிட்டது என அங்கிள் சீறினாராம்.

கானா என்பது சென்னையின் அடையாளம். பல மொழிகள் பேசபடும் நகரம் என்பதால் அதில் மொழிகலப்பு இருக்கலாம். ஆனால் இது சென்னை மண்ணின் தன்மை. கானா பாடல் சென்னை சொத்து என சீறுகின்றார்கள்.

அதோடு நிறுத்தினாலும் பரவாயில்லை, அடுத்து சொல்வதுதான் அங்கிள் சைமன் சயனைடு கடிக்கும் விஷயம்

“ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு வந்த வந்தேறிக்கு சென்னையினை பற்றி என்ன தெரியும்?” என கேள்விகள் கடுமையாக கேட்கபடுகின்றன.

எல்லோரையும் வந்தேறி என சொன்ன அங்கிள் சைமனே வந்தேறியாகிவிட்டது காலத்தின் கோலம்.

அங்கிள் சைமன் தந்திரசாலி, தமிழகம் தெலுங்கனால் கெட்டது, கலைஞரால் கெட்டது என்பார். ஆனால் சினிமாக்காரன் ராமசந்திரனால் கெட்டது என்ற உண்மையினை சொல்லமாட்டார். காரணம் இவரும் சினிமாக்காரர்.

அதனால் நாட்டை கெடுத்த சினிமாபற்றி மட்டும் அன்னார் பேசவே மாட்டார், கவனமாக தவிர்ப்பார்.

ஆனால் தூக்க கலக்கத்தில் இருந்தாரோ என்னமோ கானாவினை சாடி, பலத்த அடிவாங்கி அமர்ந்திருக்கின்றார். சென்னை வந்தேறி என்றே சொல்ல ஆரம்பித்தாயிற்று

நிலமை மீறினால் அங்கிள் சிங்கங்கையில் இருந்து புரட்சி செய்ய வேண்டிய நிலை வரலாம்.

இதற்குத்தான் சொன்னோம், தனிதமிழ்நாடு ஆனால் இப்படித்தான் பேச்சுக்கள் வரும். சென்னை ஒருவனுக்கு, செங்கல்பட்டு ஒருவனுக்கு, நெல்லை ஒருவனுக்கு என கிளம்புவார்கள். இதோ கிளம்பிவிட்டார்கள்.

இனியாவது பிரிவினைவாதிகள் யோசிக்கட்டும்

கானா தொடர்பாக சென்னைவாசிகள் அடித்துவிட்டார்கள், இனி குறவர்கள் சாமியோ…. என ஓடி வந்து எப்படி அடிப்பார்களோ தெரியாது, அங்கிள் நரிகுறவர்களுக்கும் பயப்படும் காலம் வந்துவிட்டது.

சரி நம் பங்கிற்கு ஒரு கேள்வி

கானா தமிழ்பாடலை கெடுக்கின்றது என சொல்லும் அங்கிள் சைமன், ஈழதமிழ்பாடலான “சுராங்கணி.. சுராங்கணிகா மாலு கணாவா” பாடல்கள்
வரும்பொழுதெல்லாம் எங்கிருந்தார்.

கானா பாட்டின் தாய்பாடல் அது, சிங்களம் கலந்த அந்த பாடலை பாடியது சாட்சாத் ஈழதமிழன்.

சிங்களம் கலந்து மட்டும் பாடலாமா?

சிங்கள வார்த்தை கலந்த தமிழ்பாடலை யாழ்பாணத்தான் படித்தால் அங்கிள் அமைதியாவார்

ஆனால் சென்னையில் கானா பாடல் படித்தால் , அங்கிள் குதிப்பார்

ஏன் அப்படி என்றால், அதுதான் சைமன்.